குறித்துக்கொள்ள எதுவுமில்லாத
எத்தனையோ நாட்கள்
என் நாட்குறிப்பில் இருக்கின்றன…
இந்த உலகம் வெறுமைகளால்
சூழப்பட்டு இருப்பதை
அவை நிரூபிக்கின்றன…
ஆனால்
குறித்து வைக்கக்கூடாத
குறிப்புகளுக்குள் அடங்காத ஒன்றுதான்
வாழ்க்கையாய் இருக்க முடியும்…
அந்த உலகம்
வெறுமைகளால் சூழப்பட்டது இல்லை…
அது தனக்கான மொழியை
தனக்கான இசையை
தனக்கான நளினத்தை
தானே கொண்டுள்ளது…
அதை குறித்து வைக்க இயலாது…
அது அத்தனை இயல்பானது.
அத்தனை ஆக்ரோஷமானது.
அத்தனை அற்புதமானது.
-பொன்முகலி
No comments:
Post a Comment