[22/12, 8:00 am] மணிகண்ட பிரபு: காலைப் பனி தூங்கச் சொல்கிறது,
காலையில் பணி தூங்க விடாமல் செய்கிறது
[23/12, 6:58 am] மணிகண்ட பிரபு: அனைத்து ஆச்சர்யங்களும் கரைந்துவிட்ட பின்
அருகிலிருப்பவர் எவ்வளவு மேதையாய் இருந்தாலும் சாதாரணமாகத் தான் தெரிவார்
[23/12, 6:59 am] மணிகண்ட பிரபு: நிழல்கள் மட்டுமே ஆறுதல்
சொல்கின்றன
செருப்பில்லாதவன் பாதங்களுக்கு
[23/12, 9:43 am] மணிகண்ட பிரபு: ஒரு வார்த்தை மட்டும்
போதுமானதாய்
இருக்கிறது
உறவை இட்டுச் செல்வதற்கும்
விட்டுச் செல்வதற்கும்
No comments:
Post a Comment