#மனைவியின் தேநீர்
சூடாக கொடுத்தால் தான்
மாமனார்க்கு பிரியம்
சுகர் இல்லாமல் தந்தால்
அத்தைக்கு பிடிக்கும்
டிகாசன் குறைவாய்
இருந்தால் குழந்தைக்கும்
பாலாடையுடன் இருந்தால் தான்
அவருக்கு பிடிக்கும்
எல்லாருக்கும் விதவிதமாய்
தயாரித்த தேநீரில்
ஏதெனும் ஒன்று
மிச்சமிருந்தால் பருகிகொள்கிறேன்
எனக்கான தேநீராய் நினைத்து.!
-மணி
No comments:
Post a Comment