Sunday, 21 June 2020

லட்சுமண பெருமாள்

லட்சுமண பெருமாள் எழுதிய சிறுகதை ஒன்றில் "தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண் இருப்பாள்.அவள் கணவன் ஒரு நோயாளி.கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வேலைக்கு செல்வாள்.அவளிடம் ஒரே ஒரு கிழிந்த உள்பாவாடை ஒன்றுதான் இருக்கும்.சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் உடனிருக்கும் பெண்கள் கிண்டல் செய்வார்கள். அவமானத்தால் அதனை கழட்டி எறிந்துவிட்டு நாடாவினால் புடவை இறுக்கி கட்டிக்கொள்வாள்.


அடுத்தநாள் கணவனின் பழைய அன்டர்வேரை போட்டுக்கொண்டு அதன் மேல் புடவை கட்டிக் கொண்டு வருவாள். உள்ளூர ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருக்கும். மறைவாகச் சென்று அண்டர்வேரை கழட்டி போட்டு உள்ளே நுழைவாள். அவ்வழியே வரும் மேலாளர் முன்பு கழட்டி போட்டிருந்த பாவாடையையும் டவுசரையும் பார்த்து எவன் வந்தான் எனக்கேட்க  அவமானம் தாங்காமல் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுவிடுவாள். அப்போது அவள் கணவன் இறந்து விட்டதாக சைக்கிளில் வந்து ஒருவன் சொல்வான்.எந்த சலனமின்றி செல்வாள்.அப்போது அவன் சொல்வான் "உன் பெரியப்பா மகன் சடங்கு செய்ய" உனக்கு புடவை, ஜாக்கெட்,பாவாடை எடுக்கிறேனு சொன்னான்.நான் தான் பாவாடை எதுக்கு? புடவை,ஜாக்கெட்டே போதுமென சொல்லிட்டேன்னு சொல்ல அவள் வெடித்து அழத் துவங்குவாள் னு கதை முடியும். இப்போது படித்தாலும் அப்படியே மனசு கனமாகி அழனும் போல் தோன்றும்.பல நாட்கள் இக்கதை மனதை உலுக்கியது.

No comments:

Post a Comment