அலம்பி விட்ட ஈரம் இன்னும் காயவில்லை. கலைந்து போகாத மேகங்களைப் போல திட்டுத்திட்டாய் பரவிக் கிடக்கிறது. தரை குளிர்ந்து கிடக்கிறது. ஆனால் மனம் வெதும்புகிறது. அம்மாவைக் கொண்டு எரித்து விட்டு வந்தேன். அதிகாலையில் இறந்து போனாள். அகால வேளையில் வந்தாலும் விழித்திருந்து சோறு போடுவாளே அவளுக்கு என்னால் கொடுக்க முடிந்தது நெருப்பைத்தான்
-சுப்ரமணிய ராஜூ
No comments:
Post a Comment