ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்ள நல்ல அழகான பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தான்.
அவனை அணுகிய ஒரு தரகன், “ஒரு பணக்கார விதவை இருக்கிறாள். மிகவும் அழகானவள். உன்னைவிட ஒன்றிரண்டு வயது பெரியவளாக இருப்பாள். ஆனால் பார்த்தால் அப்படித் தெரியாது. அவளுடைய அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. என்னுடன் வா, அவளைக் காட்டுகிறேன்.” என்று சொன்னான்.
தரகனுடன் போய் பெண்ணைப் பார்த்தான் அவன். அவனால் அவனது கண்களையே நம்பமுடியவில்லை. அவன் வாழ்க்கையில் அதுவரை அவ்வளவு அசிங்கமான பெண்ணைப் பார்த்ததில்லை.
ஒரு கண் ஒரு பக்கம் பார்க்கும் போது, மறுகண் அடுத்த பக்கம் பார்த்து கொண்டிருந்தது. மூக்கு கோணலாக இருந்தது. பற்கள் வெளியில் தெத்திக் கொண்டிருந்தன. அவள் தலையில் இருந்து போலி முடி என்று அப்பட்டமாகத் தெரிந்தது. அவளுடைய ஒரு கால் மற்றொரு காலை விட குட்டையாக இருந்தது. குமட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு.
தரகனின் சட்டையைப் இழுத்துப் பிடித்து அவன் காதருகில் கிசுகிசுத்தான்…
“இவளையா அழகு என்று சொன்னாய்?”
“நீ சத்தமாகவே பேசலாம். அவள் முழுச் செவிடு. உனக்குக் கலா ரசனையில்லாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? உனக்கு பிக்காசோவின் கலை பிடிக்கும் என்று நினைத்தேன். நீ இப்படி ரசனை கெட்டவனாக இருப்பாய் என்று யாருக்குத் தெரியும்?”
-ஓஷோ
(நவீன ஓவியங்களை கலாய்க்க சொன்னது)
No comments:
Post a Comment