நீ போகாதே என்று
நான் சொல்லக்கூடும்
ஆனால் அது அபசகுணம்
'சரி போ' என்றாலோ
அன்பிலாத சொல்
என்னுடன் இரு என்பது
உத்தரவு ஆகும்
'உன் விருப்பப்படி செல்' என்றாலோ
உதாசீனம் ஆகும்
நீ சென்றால் நான் இறந்துவிடுவேன்
என்பதை நம்பக்கூடும்
நம்ப மறுக்கவும் கூடும்
தலைவா நீ செல்லும்போது
நான் சொல்லவேண்டியதை
நீயே எனக்கு
சொல்லிக்கொடு
-பர்த்ருஹரி
தமிழில்:ஐராவதம்
No comments:
Post a Comment