கவிஞர் வாலி அவர்கள் “கையளவு மனசு” என்று கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு குறுந்தொடரில் நடித்துள்ளார். அதில் எனக்கு பிடித்த அவருடைய ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..
இந்த கவிதையில் அவர் அவருடைய மனைவியின் கை மனத்தை பற்றி அழகாக நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்.
மனைவி அமைவதெல்லாம் மசாலா செய்த தவம்..
உன் கை அறைபதற்கே உப்பும் மிளகாயும் தன் கை கூப்பி தவம் செய்திருக்க வேண்டும்.
நீ புடவை கட்டிய நளன், ப்ளௌஸ் மாட்டிய பீமன்..
ஆமாம்ம்??? இட்டலிக்காக நீ ஆட்டுவது மாவா, இல்லை மல்லிகை பூவா?
எங்கிருந்து வந்தது இந்தமென்மை, இந்த வெண்மை, இளகிய தன்மை?
நான் சொல்வது புகழ்ச்சி அல்ல உண்மை.
அன்று உன் கைய்யை நான் பற்ற திருமணம் காரணம்..
இன்று உன் கைய்யை நான் பற்ற நறுமணம் காரணம்..
இது கைய்யா? இல்லை கம கமவென மணக்கும் நெய்யா?
நீ தோசை சுடும் பொழுதெல்லாம் என் நெஞ்சை ஆசை சுடும்..
என் பாரதி கண்ணம்மா, ஒரு கவிஞனுக்கு கவிதை எழுத பேப்பர் தேவையில்லை
உன் பேப்பர் மசாலாவே போதும்..
No comments:
Post a Comment