கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவுதினம்
*மணி
மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
-அப்துல்ரகுமான்
*உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால்
மகுடங்கள் தலைமாறக்கூடியவை
-அப்துல்ரகுமான்
*உன் சாவில் சாம்பலை அல்ல
நெருப்பை விட்டுச்செல்
-அப்துல்ரகுமான்
*வாழ்க்கைத் தேர்வில்
வெற்றி பெறுகிறவர்கள்
விடைகளை அறிந்தவர்கள் இல்லை
வினாக்களை அறிந்தவர்களே
-அப்துல்ரகுமான்
*விதி
தொட்டிலைச் செய்யும்போது
பாடையையும்
செய்துவிடுகிறது
-அப்துல்ரகுமான்
*நீ பிரிகிறாய்
கட்டடம் முடிந்ததும்
பிரிக்கப்படும் சாரம் போல
-அப்துல்ரகுமான்
*பழமை என்பது
வயதாகிப்போன புதுமைதான்
புதுமை என்பது
மறுபிறப்பெடுத்த பழமைதான்
-அப்துல்ரகுமான்
*மரணக் காற்றில் ஒரு விளக்கை போல் அணைந்து போகாதே!
ஒரு ஊதுவத்தியைப் போல் கொஞ்சம் நறுமணமாவது விட்டு விட்டுப் போ!
-அப்துல்ரகுமான்
*நீ கிடைத்துவிடாதே
உன்னைத் தேடுவதில்தான்
என் இருத்தல்
இருக்கிறது
-அப்துல் ரகுமான்
*தர்மம் வென்றது" என்கிறார்களே;
அதர்மம் அல்லவா வென்றிருக்கிறது என்று
குழம்புகிறீர்களா?
உங்களுக்கு விஷயம் தெரியவில்லை;
அதர்மம் "நியூமராலஜி"ப்படி தன் பெயரைத்
தர்மம் என்று மாற்றிக் கொண்டது!
-கவிக்கோ
-மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment