நேதாஜி எனும் மாமனிதர்
வரையறுக்கப்பட்ட ஏமாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் ஒருபோதும் எல்லையற்ற நம்பிக்கையை இழக்கக்கூடாது.
-மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர்
இன்று சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த தினம்.வழக்கமா அவரைப் பற்றி புத்தகத்தில் நிறைய படித்திருப்போம் பரிச்சையில் எழுதி இருப்போம்.NCC யில் அந்த உடை அணியும்போதே நேதாஜி ஆகிவிட்ட ஒரு பெருமிதம்.விடுதலை போராட்டத்தைப் படிக்கும் போது அவரின் வேகம் இன்றைய இளைஞர்களின் எண்ணமாய் இருந்தது.
1897 ஜனவரி 28ஆம் நாள் ஒரிசாவின் கட்டாக்கில் பிறந்தார்.தந்தையார் ஜானகிநாத் போஸ் வழக்கறிஞர். விவேகானந்தரின் ஆன்மீக முன்னுதாரணமாகவும் சித்தரஞ்சன் தாசை அரசியல் முன்மாதிரியாகவும் கொண்டு சுபாஷ் சந்திரபோஸ் விளங்கினார்.படிப்பில் என்றும் முதல்வன்.இந்திய அரசு பணிக்கான ஐசிஎஸ் தேர்வில் (4ம் இடம்)வெற்றி பெற்று அரசாங்க வேலையில் 1920ல் சேர்ந்தார். அரசாங்க வேலையில் இருந்து கொண்டு அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்க நினைத்து அரசாங்க வேலையை துறந்தார்.
1921 ஒத்துழையாமை இயக்கத்தை வங்காளத்தில் சி ஆர் தாஸ் உடன் இணைந்து பங்கேற்றார். அவரின் சுயராஜ்ய கட்சி நாளேடான பார்வர்டு பத்திரிக்கையின் பதிப்பாசிரியராய் இருந்தார்.பகத்சிங் நண்பர் யதீந்திரநாத் சிறையில் உயிர்நீத்ததற்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி விலக்கிக் கொண்ட போது அதனை கடுமையாக கண்டித்தார் அப்போது அவருக்கு வயது 25
தீவிர அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போஸ் 1924 அக்டோபர் 24 அரசாங்கம் பிறப்பித்த அவசர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பர்மாவின் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான உடன் வங்காள காங்கிரஸ் தலைவரானார். சைமன் கமிஷனை புறக்கணிப்பு போராட்டம்.. டொமினியன் அந்தஸ்து வேண்டும் என்ற நேருவின் அறிக்கையை கண்டித்து சுதந்திரம் பெறுவதே இலக்கு என்று கூறினார்
1938 ஆம் ஆண்டு அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார்.1939 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் போட்டியில் சித்தராமையாவுக்கு எதிராக போட்டியிட்டு 203 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பட்டாபியின் தோல்வி தனது தோல்வி என்று அறிவித்தார் காந்தி. அடுத்த 6 மாதங்களுக்குள் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேற வேண்டும் இல்லையேல் காங்கிரஸ் வெகுஜன இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். இடதுசாரிகள் மற்றும் போஸின் சித்தாந்த வழிமுறைகளை நடைமுறைப்படுத்த கோரினார்.
காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டியது. போஸ் காங்கிரஸ் தலைமையில் இருந்து விலகி 1939 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியை துவக்கினார்.1940 ஆம் ஆண்டு தடையை மீறி கல்கத்தாவில் பொதுக்கூட்டம் நடத்தினார். டாக்காவில் கட்சியின் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்தினார்.பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் போஸ் மாறுவேடத்தில் வீட்டுக்காவலில் இருந்து வெளியேறி பெஷாவர், காபூல், மாஸ்கோ வழியாக ஜெர்மனியை அடைந்தார். ஜெர்மனியில் சுதந்திர இந்தியா மையம் அமைத்து செயல்பட அனுமதிக்கப்பட்டு ஆசாத் ஹிந் வானொலி மூலம் நாள்தோறும் திட்டங்களை இந்தியாவுக்கு தெரியப்படுத்தினார்.
1949ல் ஜெர்மனியில் ஹிட்லரை சந்தித்துப் பேசி அங்கிருந்த வீரர்களை கொண்டு இந்திய ராணுவம் அமைத்து மத்திய ஆசியா சென்று வடமேற்கு எல்லையில் இருந்த பிரிட்டிஷ் படையுடன் போரிட வேண்டும்..அச்சு நாடுகள் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை வேண்டும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் ஹிட்லர் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் மேற்கு ஆப்பிரிக்காவில் ஜெர்மனி ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய போர்க் கைதிகளை கொண்டு ராணுவ பிரிவுகளை 1942ல் அமைத்தார்.
அதேஆண்டு சிங்கப்பூர அரசு ஜப்பானியர் வசம் வீழ்ந்தது. ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஜப்பான் செல்ல தீர்மானித்தார். ஜப்பானின் துணை கொண்டு எளிதில் இந்தியாவை பிடித்து விடலாம் என நம்பினார். இந்திய புரட்சி தீவிரவாதி ராஷ்பிகாரி போஸ் அழைப்பின்பேரில் டோக்கியோ சென்றார். 1943இல அங்கு இந்திய சுதந்திர கழகத்தை துவக்கினார்.
#நேதாஜி ஆன வரலாறு
சிங்கப்பூர் சென்ற போஸ்க்கு உற்சாக வரவேற்பளித்தனர்.அங்குதான் ராஷ்பகாரி போஸ் சுபாஷ் சந்திரபோஸ் இந்திய சுதந்திர கழகத்தின் தலைமைப் பொறுப்பை கொடுத்து ஆலோசகராக இருந்தார். "நேதாஜி அல்லது தன்னிகரற்ற தளபதி" என்று அழைக்கப்பட்டார் சிங்கப்பூரில் இருந்தபடியே டெல்லி செல்வோம் என்று முழக்கமிட்டார்
1944-பிப்-4ல் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய படையெடுப்பு ரங்கூனில் இருந்து துவக்கினார். இந்நிலையில் பிரிட்டிஷ் படை முறியடித்து இந்தியாவுக்குள் நுழைந்தது. கடுமையான போருக்குப் பின் ஜப்பான்- இந்திய தேசிய ராணுவம் கொஹிமாவைக் கைப்பற்றியது. பருவமழையால் ராணுவ தளவாடங்கள் வந்து சேர்வது தடைபட்டது. 1945 ஜப்பான் சரணடைந்தது. நேதாஜிக்கு பின்னடைவாக அமைந்தது. ரஷ்யாவின் துணையோடு போராட விரும்பிய நேதாஜி ரஷ்யா செல்லும் வழியில் தேசிய சீனாவின் தலைநகர் தைபையில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் தைவான் அரசாங்கம் அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என சொன்னது.
இந்தியாவின் மீதும் இந்தியர்கள் விடுதலையடைய வேண்டும் எனும் தீராத வேட்கை அவரிடம் இருந்தது மறுக்கவியலாது.இன்றளவும் ஒரு வீரனுக்குரிய தனித்துவத்துடன் உள்ளார் என்பதே நிதர்சனம்
தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment