பிக்பாஸில் கமல் பரிந்துரைத்த புத்தகங்கள் -மாஸ்டர்
#The_plague
Albert Camus இன் 'The Plague' நாவலை 'கொள்ளை நோய்' என்று தமிழில் 'ச. மதனகல்யாணி' மொழிபெயர்த்துள்ளார்.
அல்ஜீரியக் கடற்கரையில் அமைந்திருக்கும் ஓரான் என்றழைக்கப்பட்ட ஒரு சாதாரண நகரத்தின் மக்கள்தொகையில் பாதிப் பேரைக் கொன்றழித்த நுண்கிருமியைப் பற்றிய கதைதான் இந்த நாவல்.
#அவமானம்
என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது.
-சாதத் ஹசன்
#வெண்முரசு
இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது.
#புயலிலே_ஒரு_தோணி
ப.சிங்காரம் புனைந்துள்ள மொழியின் அதிகபட்ச சாத்தியங்கள், நாவல் ஆக்கத்திற்கு புதிய பரிமாணங்களைத் தந்துள்ளன. நீட்டி முழக்கிப் பகடிசெய்யும் போக்கு, நாவலில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. 2ஆம் உலகப்போரில் தூரதேசத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல நினைப்பவர்களின் குமுறல்.
#அழகர்_கோயில்
"ஒரு பகுத்தறிவாளர் எழுதிய புத்தகத்தில் பக்தர்களின் உணர்வுக்கு எவ்வளவு இடம் கொடுத்திருக்கிறார் என்பதற்கான சான்று" என்று பெருந்தமிழஞறிஞர் தொ.ப குறித்து கமல் கூறியுள்ளார். அழகர் கோயில் குறித்து தொ. பரமசிவம் செய்த ஆய்வு நூல்.
#அடிமையின்_காதல்
எஸ்-ஏ. பி. 'The Man From Rio' என்ற படத்தைப் பார்த்துவிட்டு, அதில் வரும் உற்சாகமான, ஆபத்துக்களைச் சிரித்துக் கொண்டே எதிர்நோக்கும் ஹீரோவைப் போல 'அடிமையின் காதல் ' கதாநாயகனைப் படைக்கும்படி ரா. கியிடம் யோசனை சொன்னார். அதைவைத்து ''அடிமையின் காதல்'' நாவல் வெளிவந்தது.
#மிர்தாதின்_புத்தகம்
இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் இது உயர்ந்து நிற்பது. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. மிகைல் நைமி, இவரே எல்லா நூற்றாண்டுகளிலும் மாபெரும் எழுத்தாளர். நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன், எதுவுமே இதற்கு ஈடாகாது என்கிறார் ஓஷோ.
கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகம்தான் 'கோபல்லபுரத்து மக்கள்'. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா
தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லிகளில் ஒருவரான வண்ணநிலவன், ஆரம்பக் காலங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே ‘எஸ்தர்’. அந்த நூலில் இடம்பெற்றுள்ள ‘எஸ்தர்’ என்ற சிறுகதை இன்றளவும் தமிழின் மிக முக்கியமான படைப்பாக விமர்சகர்களாலும் வாசகர்களாலும் கொண்டாடப்படுகிறது.
இது ஒரு மனிதன் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை.
#தொடுவானம்_தேடி
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு மற்றும் நுண் தொழில் முனைவோருக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. அவர்கள் தினசரி சவால்களை எதிர்கொண்டு தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல இந்த நூல் பல உத்திகளை அளித்திருக்கிறது.
சுந்தர ராமசாமியின் ஜே.ஜே:சில குறிப்புக்கள் நாவலில், ஜேஜே வை மைய அச்சாக வைத்து அவனை சுற்றியுள்ள சமூகத்தை ஜேஜே மூலமாகவே விமர்சிக்கிறார் இதன் ஆசிரியர். இந்நாவல் முழுக்க நீங்கள் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அங்கதமும் பகடியும் இந்நாவல் முழுக்க நிறைந்துள்ளது.
அசோகமித்திரனின் #கரைந்தநிழல்கள்
சினிமாவில் பணியாற்றும் மனிதர்களினூடே சினிமா உலகத்தின் அசலான அவலத்தைப் பேசும் நாவலாக இருக்கிறது. ஹீரோ/யின், இயக்குனர்களின் வாழ்க்கை முறையை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் எமக்கு அடிமட்டத்தில் பணியாற்றுபவர்கள் மீது கரிசனத்தை ஏற்படுத்துகிறது.
பெருமாள்முருகனின் #கூளமாதிரி பண்ணையத்தில் வேலை செய்யும் ஒருவனின் வாழ்க்கையை அவனின் பார்வையினூடாக விவரித்து செல்கிறது கதை.
அவனுக்கு ஏற்படும் அவமானங்கள், துரோகங்கள், அவன் மீது செலுத்தப்படும் அதிகாரம், அவனுடைய இயலாமை போன்றவையே கூளமாதாரி.
No comments:
Post a Comment