Saturday, 9 January 2021

பெருமாள் முருகன்

பிளாஸ்டிக் குழாயைப் பற்றி
மேலேறிச் செல்கிறது

சுவர்களின் மேல் ஓடுகிறது
சருகுகள் சரசரக்க

மொட்டை மாடியில் உலாத்துகிறது

தண்ணீர்த் தொட்டி மூடிமேல் நின்று
கீழுலகைக் காண்கிறது

 

ஆளரவம் கேட்டதும்
சட்டெனத் தாவிவிடும்
அணிலுக்குத் தெரியும்
தனக்குரியது
மரம் தானென.

-பெருமாள் முருகன்

No comments:

Post a Comment