பிளாஸ்டிக் குழாயைப் பற்றி
மேலேறிச் செல்கிறது
சுவர்களின் மேல் ஓடுகிறது
சருகுகள் சரசரக்க
மொட்டை மாடியில் உலாத்துகிறது
தண்ணீர்த் தொட்டி மூடிமேல் நின்று
கீழுலகைக் காண்கிறது
ஆளரவம் கேட்டதும்
சட்டெனத் தாவிவிடும்
அணிலுக்குத் தெரியும்
தனக்குரியது
மரம் தானென.
-பெருமாள் முருகன்
No comments:
Post a Comment