Saturday, 16 April 2022

ஆளப்பிறந்தவர் நீங்கள் -சோம வள்ளியப்பன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:21
Pages:316

ஆளப்பிறந்தவர் நீங்கள் 
-சோம வள்ளியப்பன்

சங்க இலக்கியங்களில் தலைவன் என்றால் காப்பியத்தின் நாயகன் அல்லது காதலன் என்று பொருள் இருக்கும். காலப்போக்கில் தலைவன் என்ற சொல் குடும்பம் அரசியல் அனைத்தையும் தாண்டி தற்போது மேலாண்மை நிறுவனங்களில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. தலைமைத்துவம் என்பதை பற்றி ஒவ்வொருவரும் விரிவாக கூறியிருக்கிறார்கள். தலைமைத்துவத்தின் பண்புகள் மற்றும் நல்ல தலைவர் ஆவதற்கான குணநலன்கள் குறித்தும் முன்னணி எழுத்தாளராக அறியப்படும் சோம வள்ளியப்பன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சீன தத்துவஞானி லாவோட்சு அவர்கள் தலைமைத்துவம் பற்றிய கருத்துக்களை மேற்கோள் சொல்லியுள்ளார் 
"தலைவன் என்று இருப்பதே தெரியாத அளவுக்கு இருப்பது தான் சிறந்த தலைமை. அவனை கொண்டாடியோ, அவனுக்குக் கீழ்ப்படிந்தோ மக்கள் நடந்தால், அவன் அவ்வளவு சிறந்த தலைவனாக இருக்க முடியாது. நல்ல தலைமைக்கு அடையாளம் அதிகம் பேசாமல் இருப்பது. மேலும் தலைவன் நினைத்த செயல் முடிக்கப்பட்டுவிட்டதும், தலைவனின் குறிக்கோள் நிறைவேற்றப்பட்டதும், மக்கள் அவனைப் பின்பற்றி செயலில் ஈடுபட்டவர்களை  தாங்களே அதை செய்து முடித்தோம் என்று நினைக்கவேண்டும் என்று விளக்கி இருப்பார்.

ஆசிரியர் பெப்ஸி நிறுவனத்தில் பணியாற்றிய போது பிரஞ்சு மொழியில் உள்ள வாக்கியத்தை உயரதிகாரிகள் சொல்வார்களாம் அது சந்தர்ப்பத்தை கவர்ந்து கொள் (seize the day) என்பது தான்.learn to fight,do it right போன்ற பத்து கட்டளைகளையும் அவர்களுக்கு கொடுத்து இருப்பார்கள். மேலும் வள்ளுவரின் குறளில் அமைந்துள்ள ஆளுமைப் பண்புகளையும் விளக்கி இருப்பார்.

முடிவு எடுப்பதில் உறுதி, விடாமல் செய்யும் பாங்கு போன்ற பண்புகளில் இந்தியாவில் முக்கிய தலைமை ஆளுமையாக இருந்தவர்களின் விவரங்களையும் கொடுத்துள்ளார். லீடர்ஷிப் பாலோயர்ஷிப் என இரு வகையான கூறுகளை விளக்கமளித்துள்ளார். மிகச் சிறந்த தலைவனாக எது காரணம் கேட்டார்களாம் what it took to be a great leadership அவர் சிரித்துக்கொண்டே great followers என்றாராம். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு தான் சிறந்த தலைவனையும் அடையாளம் காட்டுகிறது.

தலைமைப் பண்பில் முதலாவது அனைத்து முடிவுகளையும் தானே எடுத்துவிட்டு பின் பற்ற வைப்பது. இரண்டாவது பார்ட்டிசிப்பேட்டிவ்  ஸ்டைல் சில இடங்களில் சில நேரங்களில் தலைமைக்கு தெரியாத விஷயங்களும் இருக்கலாம். வாங்க பார்த்துக்கலாம் என்று சொல்லி அவர்களும் உறுதுணையாக இருந்து கலந்து ஆலோசித்து செய்வது. மூன்றாவதாக முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுப்பினர்களிடம் கொடுத்துவிட்டு எடுக்கப்பட்ட முடிவுகளை தலைமைக்கு தெரிவிப்பது உதாரணத்துக்கு கல்தூண் படத்தை மேஜர் சுந்தர்ரஜன் இயக்கினார் ஆனால் சிவாஜிதான் அனைத்துவித காட்சிகளையும் எடுத்தார். இதுபோல் தலைமை பண்புகளின் சில வகைகளை இதில் சுட்டிக் காட்டியிருப்பார்.

சரியான தலைமை செய்த மாயம் எனும் பகுதியில் 1916ஆம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் இறந்தபிறகு காந்தியார் பேசுகிறார் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராஜ்குமார் சுக்லா என்ற விவசாயி எங்கள் ஊருக்கு வருமாறு காந்தியிடம் வேண்டுகோள் விடுக்கிறார் .அதனை ஏற்று சம்பரான் பகுதிக்குச் சென்று அங்கு விவசாயிகளுக்கு நடந்த கொடுமைகளை கேட்டு அறிந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கிறார். 

ஆனால் அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்துகின்றனர். அதற்கு அவர் என்னை சாம்ரான் விட்டு வெளியேறிச் செல்லும் சட்டப்படியான ஆணையை நான் மதிக்க கூடாது என்பதற்காக மீறவில்லை. அதைவிட மேலான என் மனசாட்சி சொல்வதை கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறேன் என்றார். ஒருகட்டத்தில் நிலப்பிரபுக்கள் விவசாயிகளிடம் வசூலித்த தொகையை திருப்பிக் கொடுத்தனர். கூடவே வறட்டு கௌரவத்தையும் விட்டுக் கொடுக்கிறார்கள். இந்த நிகழ்வு சாதாரணமான செயலை போல் தோன்றினாலும் எடுத்த முடிவில் விடாப்பிடியாய் இருந்து தன் ஊழியர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்த செயலாக தெரிவிக்கிறார்.

Practice what you preach என்பார்கள் எல்லாத் தியாகஙகளுக்கும் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டும் உதாரணத்துக்கு மதுவிலக்கு போராட்டத்தில் பெரியார் ஈடுபட்ட போது வெறுமனே சொல்லாமல் 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்து அதை உதாரணமாய் சொல்கிறார். நம்முடைய கொள்கையில் விடாப்பிடியாக உறுதியாக இருக்க வேண்டும் தோல்வியைக் கண்டு மனம் தளரக்கூடாது. மனம் தளரும் உறுப்பினர்களை நல்வாக்கு சொல்லி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். மார்ட்டின் லூதர் கிங்கின் எனக்கு ஒரு கனவு இருக்கிறது என்ற தலைப்பிலான பேச்சு நல்ல உதாரணம்.

மேலே போகப் போக தனிமை வந்துவிடும். முன் போல் எல்லாவற்றையும் எல்லோருடனும் பேசிவிட முடியாது. தலைமைக்கு பொறுப்பு இருக்கிறது. எதிர்பார்ப்புகள் இருக்கிறது. தலைமைக்கு எதிரிகள், தலைமையிடம் பொறாமை கொண்டவர்கள் இருப்பார்கள். தலைமையை கைப்பற்ற நினைப்பார்கள். இவர்கள் எல்லாம் கலந்ததாக தான் சுற்றியுள்ள கூட்டம் இருக்கும்.

#ரசித்த வரிகள்

தகவல் என்பது சொத்துக்களை விட மதிப்புள்ளது ஒவ்வொருவரின் யோசனைகளும் பங்களிப்புகளும் மிக முக்கியம்

என்னுடைய வெற்றிக்கான காரணம் வியாபாரத்தை சரியாக நிர்வகித்து அல்ல மக்களை சரியாக நிர்வகித்து.

தலைவராவது சிரமம் .அதைவிட சிரமம் தலைவராக தொடர்ந்து நீடிப்பது. அப்படி பலரால் நீடிக்க முடியாது கோளாறு காரணமாக கீழே விழும் சில ராக்கெட்டுகளை போல விழுந்து விடுகிறார்கள்.

நேற்றைய தலைவனுக்கு எப்படி சொல்ல வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் .இன்றைய தலைவனுக்கு எப்படி கேட்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

சிரமமான காலங்களில்தான் அதிகமாக கற்றுக் கொள்கிறோம்

இறுதியாக ராபர்ட் பிராஸ்டின் பாடலை மேற்கோள் கூறி முடிக்கிறார்." அந்தச் சந்திப்பில் இரண்டு பாதைகள் பிரிந்தன. அந்த இரண்டில் அதிகம் பேர் பிரயாணம் செய்த பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அந்த தேர்வு பெரிய மாயம். புரிந்து கொள்ள வேண்டியது எல்லாம் இதைத்தான் தலைவன் என்பவன் புதிய பாதைகள் உருவாக்கித் தருபவராக இருக்கவேண்டும். அப்படிப் பட்டவர்கள் யாராக இருந்தாலும் தலைவராகலாம். அதற்கான மனப்பக்குவம் உறுதி இருந்தால் போதும். தலைமை என்பது ஒரு பதவி அல்ல, அது ஒரு பாத்திரம். அது ஒரு பொறுப்பு என்று முடித்திருப்பார்.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment