#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105
Book:7
Pages:128
இதயத்தை திருடுகிறாய்
-ஜி.ஆர் சுரேந்தர்நாத்
வெளிப்படுத்துவதற்கு முன்கணம் வரை ஓர் சௌந்தர்ய உணர்வில் இருந்தீர்கள் இல்லையா? அதுதான் காதல்! அதற்கு பின்னானவை அனைத்தும் காதலை தக்கவைக்கும் முயற்சிகள்
-யாத்திரி
இதயத்தை திருடும் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் ஆண்கள் இதயம் முரளி போல் ஆகிவிடுகிறார்கள். இத்தொகுப்பில் உள்ள பல்வேறு கதைகளும் அப்படித்தான். சில கதைகள் நிகழ்வாகவும், சில கதைகள் இன்பமாகவும், சில கதைகள் ஏற்றுக் கொள்ளும் படியாகவும் இருப்பதுதான் இத்தொகுப்பின் சிறப்பு. கதை சொல்லும் விதத்தில் எப்போதும் எளிமையாகவும் அதே நேரத்தில் நகைச்சுவை உணர்வுடனும் கூறுவதில் ஜி ஆர் சுரேந்தர்நாத் தனித்துவம் பெற்றவர். இத்தொகுப்பிலுள்ள கதைகளும அதில் விதிவிலக்கல்ல.
திருமணமான மனோஜ் மற்றும் திலீப் செல்லத்துரை உடன் பாண்டிச்சேரிக்கு அலுவல் வேலையாக செல்கின்றனர். திருமணம் ஆகாத செல்ல துரையை மிகவும் பிடித்துப்போய் உரிமையாக செல்லம் என்று தான் அழைப்பார்கள்.தண்ணி அடித்தவுடன் செல்லம் முத்தம் கொடுப்பான். அவனின் அன்பில் நெகழ்ந்த மனோஜ் ஊருக்கு வண்டி ஏறும் முன் செல்லத்துக்கு ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புகிறான். அது தவறுதலாக அவன் மனைவிக்கு சென்று விடுகிறது.வீட்டுக்கு வந்தவுடன் மனோஜுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் இதுதான் கதை.
இந்த தொகுப்பில் நான் வாசித்த மிகவும் நெகிழ்ச்சியான கதை" நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி" ஹேராம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை ஒரு இசை நிகழ்ச்சியில் ஒருவர் பாடி முடித்தவுடன் திடீரென்று மேடைக்கு வரும் மனோஜ் அவனை கட்டியணைத்து முத்தமிட்டு பணம் தருகிறார் .இந்த பாட்டுக்கு பின்புள்ள காதல் கதையை சொல்லும்போது அமோதிதாவின் மீதும் மனோஜின் மீதும் நமக்கு அப்படி ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இப்போது இந்தப் பாடலை கேட்டால் கூட இருவரும் தான் நினைவுக்கு வருகிறார்கள்.
பெண் 2014 என்ற கதை இன்றைய நிலையில் உள்ள பெண்களின் மனதைப் பிரதிபலிக்கும் எதார்த்த நிலையை சொல்லியிருப்பார். கணவன் மனைவி சண்டையில் கணவன் மனைவியை அடித்து உதைக்க கோபத்தில் விவாகரத்து வரை செல்லும்.அந்த பெண் ஒரு கட்டத்தில் தன் முடிவை மாற்ற வேண்டிய கட்டாயம் இந்த கதையில் வரும். ஏன் அவ்வாறு மாற்றினார் என்பது கதை. இறுதி பேரா தான் கதையின் உயிர் முடிச்சு அல்லது நவீன கால பெண்களின் வாழ்வியலை சொல்லும் கருத்து எனலாம்.
"நாம நினைச்ச படியெல்லாம் வாழனும்னா பொண்ணா பொறந்து இருக்கக்கூடாது. என்னால எல்லாம் இவ்வளவு அநியாயத்தை பொறுத்துக்க முடியாது. நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகி என் புருஷன் அடிச்சான்னா அடுத்த நிமிஷமே பெட்டிய தூக்கிட்டு கிளம்பி விடுவேன் என்று ராதிகா கூற, நான் பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்தேன். சட்டென்று அன்று சிரித்த அம்மாவின் சிரிப்புக்கு இப்போது அர்த்தம் தெரிந்தது.
"இதயத்தை திருடுகிறாய்" கதையில்
கல்யாணமே செட்டாகாது இருக்கும்
பேச்சிலர் வீட்டின் எதிரில் மலையாள பெண் ஒருத்தி குடும்பத்துடன் கூடி வந்தால் எப்படி இருக்கும். மகன் காதல் திருமணம் செய்து கொண்டால் தந்தை உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஏழரை பிரச்சினை ஜாதகத்தில் இருக்கிறது. இரண்டையும் சமாளித்து எப்படி கரை சேர்ந்தார்கள் என்பது கதை.
"வெல்ல வேட்டை" கதையில் அண்ணன் தம்பி பாசத்துடன் வெல்லத்தை சாப்பிடும் போது எதிர்பாராத நிகழ்வில் தன் தம்பி உயிர் இழக்கிறான
அப்போது தம்பியின் நினைவுகளை எண்ணி பார்க்கும் அண்ணனைப் போல் நாமும் இந்த கதையில் பொருத்தி பார்க்கும்படி நிகழ்வாக இருந்தது கதை.
""பிழை திருத்தம் கதையில் வெட்டி ஆபீசராக இருக்கும் ஒருவன் அண்ணன் அண்ணிக்கு பாரமாக இருக்கப் பிடிக்காமல் தாலுகா ஆபிஸ் எதிரில் உள்ள டைப்ரைட்டிங் சென்டர் ஆரம்பித்து.. நன்றாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அப்போது இரவில் சந்திக்கும் ஒரு பெரியவர் இவனின் தொழிலால் தன் தொழில் நலிவடைந்ததை கூறி வேதனைப்பட்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று காட்டுகிறார். அதனைப் பார்த்த பிறகு இவன் எடுத்த முடிவு என்ன என்பது கதை. ஒரு தொழிலால் எப்படி மற்றொரு தொழில் நசிகிறது என்பதை கண் முன்னால் காட்டுகிறது கதை இது போன்ற கதைகளை படிக்கும் போதெல்லாம் சற்று மனம் கனத்தது. சிறுகதையின் உண்மையான அர்த்தத்தையும் உணரமுடிகிறது.
என் இனிய பொன் நிலாவே பாடலை கிட்டாரில் வாசித்துக் காட்டி ஒருவளின் காதலைப் பெற முனைகிறான்.ஒருநாள் வாசித்துக் காட்டி முடித்தவுடன் தன் திருமண பத்திரிக்கை நீட்டுகிறாள்.
நரம்பு அறுந்ததைப் போல் அவன் மனதும் அறுந்துவிடுகிறது. அந்தக் கதையின் இறுதியில் வரும் வாசகம் தான் கடவுள் சிலரை காதலர்களோடு வாழ்வதற்காக படைக்கிறார். மற்றவர்களை காதல் நினைவுகளோடு வாழ்வதற்காக படைக்கிறார் என்று.
தந்தையின் பாரத்தைச் சுமக்க கல்லூரி பெண்ணான பொன்னி எடுக்கும் முடிவு, நவீன காலத்தில் சுயநலமிக்க மனிதன் எப்படி ஒரு பெண்ணுக்கு உதவ முடியாமல் போகிறது என்பதை குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் ஒரு ஆணின் கதையும், காதலர்களே தங்கள் காதலைத் தியாகம் செய்யும் முதல் முத்தம் கதையும், இரு கோஷ்டிகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட நினைத்து இறுதியில் விநாயகர் எப்படி இவர்களை கொண்டாடினார் என நகைச்சுவை ததும்பும் கதையும் இத்தொகுப்பில் உள்ளன.
#ரசித்தது
*முதல் சந்திப்பிலேயே தண்ணி அடிக்கிற பிரண்ட்ஸ் முன்ஜென்மத்தில் அண்ணன் தம்பியா பிறந்து இருப்பாங்கன்னு சொல்லுவாங்க
*வாயிலிருந்து வந்த சொல்லையும் செல்லிலிருந்து வந்த மெசேஜ் திருப்பி வாபஸ் வாங்கவே முடியாது
*ஸ்கூல் ல ஒரு பொண்ணு உன் பேச்சில் கொஞ்சம் தர்றியா? ன்னு கேட்டா," நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் வர்றியான்னு கேட்ட மாதிரி புல்லரித்துப் போய் விடும்
*உன்ன பார்த்தா ஆக்சிடெண்ட்ல செத்து போன என் அண்ணன் மாதிரியே இருக்குது. உனக்கு எல்லாமே என் தங்கச்சி பாட்டு தெரியுமா என்று கேட்டான்
*உலகின் மிக அழகிய சிரிப்பை உதிர்த்தாள் .அது சிரிப்பு இல்லை சிம்போனி
*எங்கள் கனவு மிகவும் சீக்கிரமே கலைந்தது. காதல் திருமணங்களில் எதிர்பார்ப்புகள் அதிகம் எனவே ஏமாற்றங்களும் அதிகம்
*அவளின் முகத்தில் பெரும் துக்கத்தை என்னால் உணர முடிந்தது. மகத்தான கனவுகள் உடையும் போது வெளிப்படும் துக்கம் அது.
இதுபோன்ற வித்தியாசமான பன்னிரண்டு கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் உங்கள் சிந்தனையின் ரசனையின் எல்லையை விரிவுபடுத்தும்.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment