Tuesday, 19 April 2022

வாசித்ததும் யோசிப்பதும் -பட்டுக்கோட்டை பவளவண்ணன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:26
Pages:282

வாசித்ததும் யோசிப்பதும் 
-பட்டுக்கோட்டை பவளவண்ணன்

கதை சிறு கதைகளை படிக்கும் போது ஏற்படும் சோர்வு க்கு மாற்று மருந்தாக அவ்வப்போது சில துணுக்கு புத்தகங்களை படிப்பது வழக்கம். ஏனெனில் நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும், அறியப்படாத செய்திகள் இருக்கும், நாம் பல இடங்களில் பேசும்போது இதனை பயன்படுத்துவதற்கு வசதியாகவும் இருக்கும், எனவே எப்போதும் ஒரு துணுக்கு புத்தகம் பார்த்தவுடன் ஓரிரு பக்கங்களில நன்றாக இருந்தால் வாங்கி விடுவேன்.

எம்ஜிஆர் படங்கள் என்றாலே பலருக்கும் உயிராக இருக்கும். படத்துடன் ஒன்றி விடுவார்கள் அதேபோல் ஒரு படம் பார்க்க வந்த நரிக்குறவர்கள் கூட்டம் படத்தை ஆவலுடன் துவக்கம் முதல் இறுதிவரை பார்த்துக்கொண்டிருந்தது. இறுதிக்காட்சியில் எம்ஜிஆரின் பின்னாலிருந்து நம்பியார் கத்தியை எறிய குறி பார்த்துக் கொண்டிருந்த போது உணர்ச்சி மிகுதியில் ஒருவர் தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து திரையை சுட்டுவிட்டார். எம்ஜிஆர் தனியாகவும் நம்பியார் தனியாகவும் போய்விட்டது இந்த செய்தியை கேட்டு எம்ஜிஆரே வியந்து போனாராம்.

ஒரு தவறான காரியத்தை செய்வதற்கு எந்த ஒரு சரியான வழியும் கிடையாது. தவறு என்று தெரிந்தால் செய்யக்கூடாது. அதற்கு நியாயம் கற்பிக்க கூடிய வழிகள் இருந்தாலும் தவறு தவறுதான். சட்டத்தின் ஓட்டைகள் இருக்கலாம். எதிராளி சாமர்த்தியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால நமக்கு அது தவறு என்று தெரிந்தால் அதை செய்யாமல் இருப்பதுதான் integrity

*உன்னிகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு கல்வியை அடிப்படை உரிமையாக கொள்ள வேண்டும் என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிபதிகள் மோகன் ,ஜீவன்ரெட்டி கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இரு நீதிபதிகளும் தனித்தனியே தீர்ப்பு எழுதினார்.. என்னும் இரண்டு தீர்ப்புகளும் ஒத்த கருத்தை வெளியிட்டது. நீதிபதி மோகன் எழுதிய தீர்ப்பில் கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்ற திருக்குறளை தமிழில் எழுதினார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் வள்ளுவர் குறள் அதுவும் வள்ளுவர் மொழியான தமிழிலேயே பதிவு செய்யப்பட்டது அதுதான் முதல் முறை.

*காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம் சி சுப்பிரமணியம் கல்வி அமைச்சராக இருந்தார். திமுகவின் இப்போதைய பொதுச் செயலாளர் அன்பழகன் இந்தித் திணிப்புக்கு எதிராக சட்டசபையில் காரசாரமாக பேசிவிட்டு அமர்ந்தார். சி சுப்பிரமணியம் எழுந்து சூடு ஆறிப்போன விஷயம் பற்றி பேராசிரியர் மிகவும் சூடாக பேசியுள்ளார் என்றார். சட்டென்று எழுந்த அன்பழகன் சொரணை உள்ளவனுக்குத்தான் சூடு தெரியும் என்றார்.

*ஜின்னாவும் காந்தியின் எப்போதும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு இருந்தனர். ஆனால் காந்தி கொலை செய்யப்பட்ட போது ஜின்னா நான் மிகவும் வருந்துகிறேன் என்று எனக்குள் ஏதோ ஒன்று செத்து விட்டது என்று சொன்னார். இனி ஜின்னா  யாருடன் மோதுவது? யாருக்கு எதிராக போராட முடியும்? பகைவன் இல்லை என்றால் ஆணவம் விழுந்துவிடுகிறது. நீங்கள் உங்கள் நண்பர்களாலும் பகைவர்களாலும் உருவாக்குகிறீர்கள். நண்பரும் பகைவரும் இல்லாதவர் தேர்ந்தெடுப்பு இல்லாதவர்.. அற்புதத்தில் அற்புதம் எனும் நூலில் ஓஷோ

*தமிழகத்தின் அப்போதைய முதல்வரான ஓ.பி ராமசாமி ரெட்டியார் ஒரு முறை உடல்நலமின்றி சிகிச்சைக்காக பொதுமருத்துவ மருத்துவமனையில் இருந்தார் .அப்போது மருத்துவருடன் கேட்டுக்கொண்டது.. எனக்கு சிகிச்சை அளித்த பின்னர் நீங்களோ உங்கள் உறவினர்களோ யாரும் என்னிடம் சிபாரிசுக்கு வரக்கூடாது, பதவிஉயர்வு சலுகையை எதிர்பார்க்கக்கூடாது, என்னிடம் அரசியல் குறித்து எதுவும் பேசக்கூடாது என்ற மூன்று நிபந்தனைகளை டாக்டர் சம்மதித்த பின்னரே சிகிச்சை பெற ஒப்புக்கொண்டார் ஓமந்தூரார். பிச்சையா எழுதிய சிந்தனை உள்ள நூலில் இருந்து

*குடிப்பழக்கம் என்பது வளர்ந்து வரும் ஒரு சமூக தீமை. அதை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதே என்னுடைய கருத்தாகும். ஆசைகட்டி அழைப்பதற்கு வீட்டுக்கு அருகிலேயே மதுக்கடை இருக்கும் வரையில் குடிகாரர் அதை நாம் அணுக முடியாது. ஒரு திறந்த பெட்டியில் நிறைய இனிப்பு பலகாரங்களை எதிரில் வைத்து விட்டு ஒரு குழந்தையையும் வயதானவரையோ கூட அதைத் தொடக்கூடாது என்று தடுக்க முடியுமா? அந்த பெட்டியை அகற்றினால் ஒழிய அது சாத்தியமில்லை. மதுவினால் வறுமை ஏற்படுகிறது, வறுமையினால் குற்றங்கள் ஏற்படுகின்றன, குற்றங்களின் குடும்பங்கள் சீரழிகின்றன என்று மதுவின் தீமைகள் பற்றி ஹரிஜன் பத்திரிகையில் காந்திஜி எழுதிய கட்டுரைகளில் சில பகுதிகள்

*கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஒரு பத்திரிக்கை கட்டுரையில் மணிரத்னத்துக்கு கிடைத்த ஒரு ஐடியா. அமெரிக்காவில் வளரும் சிறுமி தன் சொந்தத் தாயை சந்திக்க வியட்னாம் செல்லும்போது அவளை கேட்பதற்காக 10 கேள்விகள் எழுதி வைத்துக் கொள்கிறாள். இந்த ஒரு ஸ்பார்க் மணிரத்தினத்திற்கு போதுமானதாக இருந்தது .இதை ஈழப்போராட்ட சூழ்நிலைக்கு மாற்றலாம் என்றார் .இந்த படம் உலக அளவில் பல வெற்றிகளை கண்டாலும் தமிழ்நாட்டில் வியாபார ரீதியாக பெரிதாக போனதாக சொல்ல முடியாது. நட்சத்திரங்களை நடிக்க வைப்பதில் அவர்கள் நட்சத்திர அந்தஸ்தால் நிறைய எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் ஏற்படுகின்றன. அவை நிறைவேறவில்லை என்றால் என்ன நல்ல படமாக இருந்தாலும் நிராகரித்து விடும் அபாயம் உள்ளது என்று ஆஸ்கார் விருது பெறுவது எப்படி எனும் கட்டுரையில் சுஜாதா எழுதியுள்ளார்.

பல சுவையான தகவல்கள் பல புத்தகங்களிலிருந்து காட்டப்பட்டுள்ள மேற்கோள்கள் படித்ததில் சிந்தித்தது படித்ததில் பிடித்தது எனும் தலைப்புகளில் பல சுவையான நிகழ்வுகளை படிக்கும்போது பல புத்தகங்களை படித்த இன்பம் கிடைக்கிறது 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment