#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105
Book:20
Pages:332
#முரண்சுவை
-நடிகர் ராஜேஷ்
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை புத்தகத் திருவிழாவில் நடிகர் ராஜேஷ் அவர்களின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. தான் படித்த புத்தகங்களின் மூலம் அவர் பேசிய பேச்சு அவரின் மேல் மதிப்பு கொள்ள வைத்தது. எப்போது அவரின் உரையை கேட்டாலும் அவர் புத்தகம் எப்போது வந்தாலும் வாங்கிவிடுவேன். அப்போதுதான் தினமணி கதிரில் அவர் எழுதிய கட்டுரையை ஓரிரண்டு படித்தாலும் புத்தகமாய் வாங்கி படிக்கும் போது முழுமையாய் கருத்துக்களை பெற முடிகிறது.
ஒரு மனிதனுக்கு நான்கு விதங்களில் அறிவு வருகிறது..
படித்த அறிவு, நேரில் பார்த்த அறிவு, பிறர் கூறி கேட்ட அறிவு, தான் அனுபவித்து அறியும் அறிவு. இந்த நான்கு விதங்களில் பெரும் அறிவு தான் அவனது வாழ்க்கையை சீராக்க முடியும். இப்படி புத்தகங்களில் தான் படித்த தனி மனித ஆளுமைகளின் முரண்களை இந்த புத்தகத்தில் மிக அழகாக சொல்லியிருப்பார்.
சட்டைப் பையில் எப்போதும் ராஜினாமா கடிதத்தை வைத்திருப்பார் ராஜாஜி. ஜின்னாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸில் அப்போதே குரல் கொடுத்தவர், குலக்கல்வித் திட்டம் சுதந்திரா கட்சி என அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே வரும் போது 1962 ஆம் ஆண்டு தனது எண்பத்தி மூன்றாம் வயதில் அமெரிக்கா சென்று இறங்கிய உடன் அதிபர் கென்னடி இவரை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றது ஆச்சரிய தகவல்களாய் இருந்தது.
எந்தத் துப்பாக்கியால் யூதர்களின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து கொண்றாரோ அதேபோல் ப்ரீட்டா எனும் பிஸ்டலின் மூலம் தன்னை மாய்த்துக் கொண்டார்.
பெர்லினிலிருந்து 10 கி.மீ தொலைவில் ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பதை அறிந்த ஹிட்லர் தன்னை 200 லிட்டர் பெட்ரோல் ஊற்றி எரிக்கும் படி ஆணையிட்டார். ஆனால் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக 195 லிட்டர் பெட்ரோல் தான் கிடைத்தது என்பது போன்ற அறியாத தகவல்கள் இதில் இருக்கிறது.
காமராஜரை பற்றி அறியாத பல விஷயங்கள் சொன்னதோடு தன்னை தோற்கடித்த சீனிவாசனின் திருமணத்திறகு நேரில் சென்று வாழ்த்தியவர்தான் காமராஜர்.
நடிகர் ராஜேஷ் ஒரு முறை நாஞ்சில் மனோகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அப்போது முகம் தெரியாத ஒருவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டு சென்றார். பிறகு தான் தெரிந்தது அவர் தான் சீனிவாசன் என்று. வரலாறு சிலரை மறக்கச் செய்துவிடும். சிலரை மட்டுமே வரலாறு குறித்துக் கொள்ளும் அப்படிப்பட்டவர் தான் காமராஜர் என்றதோடு மேலும் பல தகவல்களையும் சொல்லி இருக்கிறார்.
லண்டனில் ராணி எலிசபெத் ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் ஊர்வலம் செல்வாராம் அதை பார்த்துக்கொண்டிருந்த செல்வந்தருக்கு தானும் அதுபோல் ஊர்வலம் செல்ல ஆசைப்பட்டு ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் சென்றாராம். உடனே அவரை கைது செய்து வழக்கு தொடுத்தார்கள். யாருமே அவரை விடுவிக்க வராத போது ஒருவர் மிகவும் துணிச்சலோடு வந்து வாதாடினார்.
ராணியாரின் குதிரைகளைப் போல் அல்லாமல் எனது கட்சிக்காரரின் 7 குதிரைகளில் இரண்டு ஆண் குதிரை எனவே இந்த வேறுபாட்டின் காரணமாக அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். உடனே அவரும் விடுதலை செய்தார் மகிழ்ச்சி அடைந்த அவர் 100 செக் தாள்களை கொண்ட செக் புக்கில கையெழுத்திட்டு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ளும் என்றாராம். அவர் பணிவுடன் வேண்டாம் என்று மறுத்தாராம் அவர்தான் முகமது அலி ஜின்னா. அவ்வளவு துணிச்சல் மிக்கவர் தான் இறுதிக்காலத்தில் தன்மேல் வந்தமர்ந்த ஈயை கூட விரட்ட முடியாத சூழலை காட்சிப்படுத்தி இருப்பார் இப்புத்தகத்தில்.
1921 ஆம் ஆண்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக பரிட்சையை புறக்கணித்தார். இருப்பினும் கண்டிப்புடன் அவரை மன்னித்த அரசு பின்பு நான்கு வருடம் கடினமாக உழைத்து பட்டம்பெற்றதால் அவருக்கு சாஸ்திரி பட்டம் கிடைத்தது.
கிராமம் கிராமமாக உழவர்களை சந்தித்த லால்பகதூர் சாஸ்திரிக்கு தண்டனையாக முப்பது மாதம் சிறை தண்டனை கிடைத்தது. அப்போது அவரின் மகன் மற்றும் மகள் கொடும் நோயினால் இறந்தனர். ஆனாலும் இறப்பில் கலந்து கொண்டு மீண்டும் சிறை சென்றார். அவருடைய காலத்தில் தான் ஊர்க்காவல் படை அமைக்கப்பட்டது .பெண் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டனர். ரயில்வே துறை மந்திரியாக இருந்தபோது முதல் முறை ரயில் விபத்து ஏற்பட்டபோது ராஜினாமா செய்ததை நேரு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்பதும் திருச்சி அருகே ரயில் தடம் புரண்ட போது அவர் விமானத்தில் சென்று கொண்டிருந்தார். செய்தி அறிந்ததும் அங்கிருந்து டெலக்சில் நேருவுக்கு ராஜினாமா கடிதம் கொடுத்தார். இந்த தவறுக்கு அவர் பொறுப்பில்லை ஆயினும் அந்தத் துறைக்கு அவர் பொறுப்பேற்று ராஜினாமா செய்தது அவரின் நேர்மையை குணத்தை அறியலாம்.
மேடைக்கு மேடை காங்கிரசை தாக்கி பேசிய ஜீவா தான் கடைசி காலத்தில் காமராஜருக்கு போன் பண்ணுங்க என்றாராம். ஜீவாவின் சிலைக்கு எம்ஜிஆர்தான் முழு செலவையும் ஏற்றிருந்தார். பிடித்த வாதம் பிடிவாதம் எனும் தலைப்பில் இந்திரா காந்தி குறித்து சுவைபட எழுதியுள்ளார் கணவர் பெரோஸ் காந்தியை கடைப்பிடித்த நாள் அன்று அவருக்கு ஒரு வீரவாள் பரிசளிக்கப்பட்டது ஒரு உறுதிமொழியை ஏற்க வைத்தனர்
"எங்கள் சுதந்திரத்தை பறிக்க நினைப்பவர்கள் இந்த பிரபஞ்சத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த வாள் தான் பதில் சொல்லும் என்று கூறினார்களாம்"
இறப்பதற்கு சில மணி துளிகளுக்கு முன்புதான் சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி செய்யும் கையெழுத்துதான் அவரின் கடைசி கையெழுத்தாக அமைந்துவிட்டது.
தனலட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் பெண தலைவராக விளங்கியவர் பாப்பா உமாநாத். ஒன்றரை வயதில் தந்தையை இழந்து வாழும் அவர் சிறு வயதில் அனைவரும் பாப்பா என்று அழைத்ததால் அதுவே அவருக்கு நிரந்தரமாகி விட்டது. வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்திய போதும் பொன்மலையில் பாலர் சங்கம் மாதர் சங்கம் போன்றவற்றில் ஈடுபட்டார்.வாழ்நாளெல்லாம் போராட்டங்கள், சிறைச்சாலை என இருந்தாலும் 1989 ஆம் ஆண்டு திருவெரும்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களின் குரலாக தொடர்ந்து குரல் கொடுத்தவர் இறுதிவரை இயக்கத்திற்காக தம் பணியைச் செய்தார். இறுதி காலத்தில் கூட கட்சி கொடுத்த ஓய்வூதியத்தை மீண்டும் கட்சிக்கே திருப்பி செலுத்தினார்.
இதுபோல் பல்வேறு ஆளுமைகளின சொல்லப்படாத தகவல்களை மிக சுவைபட சொல்லியுள்ளார் நடிகர் ராஜேஷ்.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment