நம் உடலில் பல நாடிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது மூன்று நாடிகள். அவை இடகலை , பிங்கலை , சுழுமுனை என்பன.வலைவானதை பாம்புகள் என்று சொல்வது வழக்கம். இடகலை , பிங்கலை நாடிகள் வலைவானதாக இருப்பதால் அவை பாம்புகளாக சித்தரிக்க படுகின்றன.இந்த மூன்று நாடிகளும் சேரும் இடத்தை ஆற்றல் மையம் அல்லது சக்கரம் என்று அழைக்க படுகிறது. நவீன அறிவியலில் சொல்ல படும் நாளமில்லா சுரப்பிகள் உள்ள இடங்கள் தான் இந்த சக்கரங்கள்.நம் உடலில் உள்ள உயிர் சக்தியின் மையம் மூலாதாரம் என்ற கீழ் சக்கரத்தில் இருக்கும். இதை மேல் சக்கரங்கள் ஆன ஆக்கினை மற்றும் சகஸ்ரகாரத்திற்கு மாற்றுவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும் என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்தார்கள்.
No comments:
Post a Comment