Thursday, 18 May 2023

காப்சா


கற்கை நன்றே-32
*மணி

CAPTCHA - Completely Automated Public Turing Test to Tell Computers and Humans Apart.

தமிழில், மனிதர்கள் மற்றும் கணினிகளை வேறுபடுத்திக் காட்டும், முழுவதுமாக தானியங்கி முறையில் செயல்படும் டூரிங் சோதனை

இங்கிலாந்தில் இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மானிய நாஜிக்களின் ரகசிய சங்கேத செய்திகளை புரிந்து கொண்டு, இங்கிலாந்து மற்றும் நேச நாடுகள் போரில் ஜெயிக்க உதவியவர் அலன் டூரிங். அவர் பிரபல கணினி மேதை. அவர் இயந்திரங்கள் மனிதர்களைப் போன்று அறிவாட்சித்தரம் பெற்றிருக்க முடியுமா என்பதற்கு டூரிங் சோதனை(Turing Test) என்ற ஒன்றைக் குறிப்பிட்டார். அதில், ஒரே கேள்வியை மனிதன் மற்றும் இயந்திரத்திற்கு எழுப்பி, அதன் மூலம், பதிலைக் கொண்டு, இயந்திரத்தினால் மனிதனைப் போல , வேஷமிடமுடியுமா(Imitate) என்று கண்டுபிடிக்கலாம் என்றார்.

அலன் டூரிங்

அதுதான் இன்று காப்ட்சா(CAPTCHA) என்று அழைக்கப்படுகிறது. இது 2000 ஆம் ஆண்டு, லூயிஸ் வான் ஆன்(Luis Von Ahn) மற்றும் அவரது பேராசிரியர் மேனுவல் பிளம்(Manuel Blum) அவர்களால் , கணினிகளை மற்றும் கணினி வலையமைப்புகளை(computer network), தானியங்கி நிரல்களின்(automated programs) தாக்குதலிலிருந்து காப்பாற்ற கண்டுபிடிக்கப்பட்டது.

இயந்திர செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence) பெருகியுள்ள இந்தக் காலத்தில், இந்த காப்ட்சா தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகிறது. திருடர்களைக் கொண்டு, பூட்டு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதைப் போல், இதுவும் தொடர்ந்து கடினமாகிக் கொண்டே வருகிறது.

2000 ஆம் ஆண்டில், லூயிஸ் வான் அஹ்ன் என்ற 22 வயது இளைஞன் தனது பேராசிரியர் மானுவல் ப்ளூம் உடன் இணைந்து தானியங்கு நிரல்களை வெவ்வேறு நெட்வொர்க்குகள் மற்றும் இணையதளங்களைத் தாக்குவதைத் தடுப்பதற்காக கேப்ட்சாவை உருவாக்கினார்.

பயனர் மனிதரா இல்லையா என்பது சரிபார்க்கப்பட்டது
இது OCR ஆல் படிக்க முடியாத வார்த்தையை சரிபார்த்து, மனித அறிவுக்காக அதை டிஜிட்டல் மயமாக்கியது

கேப்ட்சா வகைகள்

கேப்ட்சாக்கள் பொதுவாக மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன-

1.உரை அடிப்படையிஎழுத்துக்கள்
-சிதைந்த எழுத்துக்கள்

2.CAPTCHA படம்

3.ஆடியோ கேப்ட்சா

பின்னர் இன்று நாம் பயன்படுத்தும் புரட்சிகர API வந்தது - NoCAPTCHA reCAPTCHA.

I'm not a robot  வகை

இதுவும் பாதுகாப்பு
 குறைவாகவே உணரப்பட்டது

சைபர் செக்யூரிட்டியின் பாதுகாப்புற்காகவே இவையெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இன்னும் எதிர்காலத்தில் மாற்றமடையலாம்

இனியகாலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment