Friday, 5 May 2023

என்.சொக்கன்


’இல்லை’யும் ‘அல்ல’வும் ஒன்றுதானா? ஒரே விஷயத்தைச் சொல்வதற்கு ஏன் இரண்டு சொற்கள்?

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் எழுதிய ‘கட்டுரைக் கசடறை’ (என்னவொரு அற்புதமான தலைப்பு!) என்ற நூலைப் படிக்கும்போது, இல்லை, அல்ல என்கிற இரு சொற்களுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பது புரிந்தது: 

ஒரு பொருளின் இன்மையைக் குறிக்கும்போது ‘இல்லை’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டும். உதாரணம், ‘கோயிஞ்சாமியிடம் கெட்ட குணங்கள் இல்லை.

’ ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு, இதுவும் அதுவும் வெவ்வேறு என்று சொல்லும்போது ‘அல்ல’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டும். உதாரணம், ’கோயிஞ்சாமி கெட்டவன் அல்ல.’

 இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ’அல்ல’ என்பது அஃறிணைக்குதான், உயர்திணைக்குக் ‘கோயிஞ்சாமி கெட்டவன் அல்லன்’ (அல்லது) ‘கோயிஞ்சாமி கெட்டவர் அல்லர்’ என்று எழுதவேண்டும்

-என்.சொக்கன்

No comments:

Post a Comment