மகாத்மா காந்தியின் பிரார்த்தனை .
(ஒரு சுமாரான மொழிபெயர்ப்பு)
கடவுளே!
வலியவர்கள் முன்பு சத்தியத்தை உரைக்கும் துணிவை எனக்குக் கொடு.
பலவீனர்களின் கைதட்டலுக்காகப் பொய் உரைக்க என்னை விடாதே.
நீ எனக்கு அதிர்ஷ்டத்தை அளித்தால் என் அறிவை எடுத்து விடாதே
நீ எனக்கு வெற்றியை அளித்தால் எனது பணிவை எடுத்து விடாதே.
நீ பணிவை எனக்கு அளித்தால் எனது கவுரவத்தை எடுத்து விடாதே.
எப்போதும் நாணயத்தின் மறுபக்கத்தைக் காண எனக்கு உதவி செய்.
என்னைப் போலவே சிந்திக்காதவர்களை துரோகிகள் என்று எண்ண
என்னை அனுமதியாதே.
என்னை நான் விரும்புவது போலவே மற்றவரையும் விரும்பக் கற்றுக்கொடு
வெல்லும்போது ஆணவத்தினாலும்
தோற்கும்போது மனத் தளர்ச்சியினாலும்
வீழ்ந்துவிட என்னை அனுமதிக்காதே.
வெற்றியைவிடவும் தோல்வி நீடித்திருக்கும் ஞானம்
என்று எனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இரு.
மன்னிப்பது மேன்மையின்
பழிவாங்குதல் தீமையின் அறிகுறி
என்று எனக்குக் கற்றுக்கொடு.
நீ என்னிடமிருந்து வெற்றியை எடுத்துக்கொண்டால்
அதிலிருந்து கற்றுக்கொள்ளும் ஊக்கத்தை எனக்கு வழங்கு
நான் மற்றவரைக் காயப்படுத்தினால்
அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பான்மையை எனக்கு வழங்கு.
மற்றவர்கள் என்னைக் காயப்படுத்தினால்
அவர்களை மன்னிக்கும் மனப்பான்மையை எனக்கு வழங்கு.
கடவுளே!
எப்போதேனும் நான் உன்னை மறந்தால்
தயவுசெய்து
நீ என்னை மறந்துவிடாதே.
-போகன் சங்கர்
No comments:
Post a Comment