மாட்டுத் தாவளம் - என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி 'மாட்டுத் தாவணி' - ஆகியிருக்க வாய்ப்புள்ளது.
தாவளம் > தாவளி > தாவணி.
மாடுகளை விற்பனை செய்யும் சந்தை மாட்டுத் தாவளம் எனப்பட்டது.
யானைகளைக் கட்டி விற்பனை செய்யப்பட்ட சந்தைக்கு யானைத்தாவளம் என்று பெயர். (கோவை மாவட்டத்தின் 'வேலந்தாவளம்' (வேழம் = யானை) என்ற ஊரின் பெயரும் இப்படி வந்ததே! (3000 ஆண்டுகள் பழமையான - கோவை வேலந்தாவளம், குமிட்டிபதி )
அக்காலத்து வணிகர்கள் விற்பனை செய்யும் பண்டங்களை மாட்டு வண்டிகளிலேற்றி ஊரூராகச் சென்று வியாபாரம் செய்வர். அவ்வணிகர்கள் தங்கி இளைப்பாறிய இடங்கள்' தாவளம்' எனப்பட்டது.
தாவளம் = வணிகச் சந்தை, வணிகம் நடைபெறும் இடம், வணிகர்கள் தங்குமிடம் என்று பொருள். இன்றைய Lodge / Lodging என்ற சொல்லுக்கு ஒப்பானது.
நெடுஞ்சாலைகளில் வணிகர்கள் தங்கிச்செல்லவும், அங்கேயே வணிகம் செய்யவும் உள்ள தங்குமிடங்கள் தாவளங்கள் எனப்படும்
-படித்தது
No comments:
Post a Comment