Thursday, 11 May 2023

தாவளம்


மாட்டுத் தாவளம் - என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி 'மாட்டுத் தாவணி' - ஆகியிருக்க வாய்ப்புள்ளது.

தாவளம் > தாவளி > தாவணி.

மாடுகளை விற்பனை செய்யும் சந்தை மாட்டுத் தாவளம் எனப்பட்டது.

யானைகளைக் கட்டி விற்பனை செய்யப்பட்ட சந்தைக்கு யானைத்தாவளம் என்று பெயர். (கோவை மாவட்டத்தின் 'வேலந்தாவளம்' (வேழம் = யானை) என்ற ஊரின் பெயரும் இப்படி வந்ததே! (3000 ஆண்டுகள் பழமையான - கோவை வேலந்தாவளம், குமிட்டிபதி )

அக்காலத்து வணிகர்கள் விற்பனை செய்யும் பண்டங்களை மாட்டு வண்டிகளிலேற்றி ஊரூராகச் சென்று வியாபாரம் செய்வர். அவ்வணிகர்கள் தங்கி இளைப்பாறிய இடங்கள்' தாவளம்' எனப்பட்டது.

தாவளம் = வணிகச் சந்தை, வணிகம் நடைபெறும் இடம், வணிகர்கள் தங்குமிடம் என்று பொருள். இன்றைய Lodge / Lodging என்ற சொல்லுக்கு ஒப்பானது.

நெடுஞ்சாலைகளில் வணிகர்கள் தங்கிச்செல்லவும், அங்கேயே வணிகம் செய்யவும் உள்ள தங்குமிடங்கள் தாவளங்கள் எனப்படும்

-படித்தது

No comments:

Post a Comment