எப்போதெல்லாம்இழந்த
அப்பாவைப்
பார்க்கவேண்டும்
எனத்தோன்றுகிறதோ
அப்போதெல்லாம்
கண்ணாடியில்
என்முகம் பார்க்கிறேன்
மூக்கில்
முக வாயில்
கன்னக்கதுப்பில்
காது மடலில்
தடிமனான கீழ்உதடில்
நெற்றியில்
முன்சொட்டையில்
ஏதேனும்
ஒரு அடையாளமாய் அப்பாதெரிகிறார்
-மகேஷ்வரன்
No comments:
Post a Comment