விபத்து என்றால் என்ன? ஏன் நடக்கிறது.
விபத்துகளைக் குறித்து நமது கருத்துக்கள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். விபத்திற்கான காரணங்களைப் பற்றி பேசும் பொழுது நமது விருப்பு வெறுப்புகள் நம் பார்வையை மங்கச் செய்வது இயல்புதான்.
தொழிற்சாலை பாதுகாப்பு மேலான்மை குறித்த அறிவு மற்றும் அனுபவத்தோடு சொல்கிறேன்.
1. அனைத்து விபத்துகளையும் தவிர்க்க முடியும். / all accidents are preventable.
2. விபத்துகளை தடுக்க ஒன்றுக்கு மேலான பாதுகாப்பு தடுப்பு அடுக்குகள் உண்டு.( protective Barriers ). இந்த அடுக்குகள் இயந்திரமாக இருக்கலாம், கருவிகளாக, செயல் முறைகளாக இருக்கலாம், மனிதர்களின் செயல்பாடுகளாக இருக்கலாம். அனைத்து பாதுகாப்பு அடுக்குகளும் செயல்படவில்லையெனில் விபத்து நடக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
3. விபத்துகள் அதுவாக நடப்பதில்லை. கடவுள் / காலம் போன்றவை உருவாக்கும் நிகழ்வும் அல்ல. / Accidents don’t happen , They are caused by the actions or inactions of one or more protective layer or people.
3. பெரிய விபத்துகள் தீடிரென நடப்பதில்லை. பெரும் விபத்துகள் நடக்கும் முன் பல சிறு விபத்துகள் நிகழ்ந்திருக்கும் அல்லது சிறு இழையில் தவிர்க்கப்பட்டிருக்கும் அல்லது மறைக்கப்பட்டிருக்கும். பல காலமாக கவனத்தில் கொள்ளாத சிறு விபத்துகளின் நீட்சியே இவை.
அனைத்து விபத்துகளுக்கும் காரணங்கள் இரண்டே இரண்டுதான்
1. மனிதர்களின் கவனக் குறைவு
2. நிர்வாக செயல் திறமையின்மை / நிர்வாக நெறி முறைகள் இல்லாமை அல்லது பின்பற்றாமை.
எனக்குப் பிடித்த விபத்து குறித்த வாக்கியம் : Accidents don't happen to people who take accidents as a personal insult.
விபத்துகளை தனிப்பட்ட அவமானமாக கருதுபவர்களுக்கு விபத்துகள் ஏற்படுவதில்லை.
No comments:
Post a Comment