Sunday, 16 July 2023

பா.வெ


"வாய்மொழி மரபில் நிறுத்தற்குறிகள் போன்ற அடையாளக்குறிகள் எதுவும் இருக்காது. இந்த அடையாளக்குறிகள் 'இன்மையை' ஈடுசெய்வதற்காக வாய்மொழி மரபில் 'Modulation' உபயோகப்படுகிறது. ஒரு ஆச்சர்யக்குறியை இட முடியாத இடத்தில் "ஹா.. "என்ற ஒரு ஒலி அதை ஈடுசெய்கிறது. கேள்விக்குறி இட முடியாத இடத்தில் "அப்படியா.. " என்ற ஒலி கேள்விக்குறியை ஈடுசெய்கிறது. அல்லது, தலைமாற்றாகச் சொல்ல வேண்டுமானால் Modulation ஐ ஈடுசெய்வதற்காக நாம் சில குறியீடுகளை கண்டுபிடித்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய கதைகளில் நிறுத்தற்குறி, கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு இந்த குறிகளை ஈடுசெய்யக்கூடிய சப்தமுறையை எழுத்துக்களின் வழியே உருவாக்க முடியுமா என்கிற பரிசோதனை முயற்சியாக நான் என்னுடைய புனைவுகளை அமைக்கிறேன்.

இந்த பரிசோதனைகளை நான் செய்வதற்காக வாக்கிய அமைப்புகளை அதற்குத் தகுந்தாற்போல மாற்றுகிறேன். இப்படி வாக்கிய அமைப்புகளை தகுந்தாற்போல மாற்றும்போது மொழியினுடைய சாத்தியப்பாடு அதிகமாகிறது. மொழி அதிகமாக வேண்டியிருக்கிறது. மொழியினுடைய திரவத்தன்மை அதிகமாகிறது. திரவத்தன்மை தொடர்ந்து எனக்கு நிகழ்வுகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது."

-புதுமைப்பித்தன் நினைவு விருது விழாவில் பா.வெங்கடேசன்

No comments:

Post a Comment