எல்லாம் அவசரம்
ஒரு சிறிய நகரத்தில் கார் விபத்து ஏற்பட்டது.
அதில் பலியானவரை சுற்றி ஒரு பெருங்கூட்டம் கூடி இருந்தது.
அப்போது அங்கு வந்த பத்திரிகை நிருபர்,அந்த விபத்தை நெருக்கமாக பார்க்க முடியாததால் தவித்து கொண்டு இருந்தார்.
அவருக்கு சட்டென ஒரு யோசனை வந்தது.
"இந்த விபத்தில் இறந்து போனவரின் தந்தை நான்"என்று அவர் வருத்தமுடன் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
நான் அருகில் செல்ல வேண்டும் ,தயவு செய்து வழிவிடுங்கள்.
உடனே,அந்தக் கூட்டத்தினர் விலகி நின்று,அவருக்காக வழி விட்டனர்.
நிருபர் அருகில் சென்றவுடன்,விபத்தில் பலியானவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார், அது ஒரு கழுதை????????? 🙄🤔
இப்படிதான் மனிதன் எல்லாவற்றிருக்கும் அவசரப்படுகிறான்...!
- ஓஷோ
No comments:
Post a Comment