Monday, 17 July 2023

ப.பி


படித்ததில் பிடித்தது

உதய கீதம் படம் . மோகன் சிறையில் . ரேவதி அவரை விரும்புகிறார் . பாடு நிலாவே . தேன் கவிதை என பாடல் எழுதினேன் . இதே வரியை மோகனும் பாடுவதாக எழுதினேன் . இளையராஜா யோசித்தார் . ரேவதி சிறைக்கு வெளியே இருக்கிறார் . நிலவை பார்த்து பாடுவது பொருத்தம்தான் . ஆனால் சிறைக்குள் இருக்கும் மோகன் பாடு நிலாவே என எப்படி பாடுவார் . அவருக்கு நிலா தெரியாதே என்றார் . நிலவொளி தெரியுமே என்றேன் . இசைஞானி சமாதானம் ஆகவில்லை . யோசித்தோம் . திடீரென அவர் முகத்தில் பரவசம் . ஒரே ஒர் எழுத்தை சேர்ப்போம் . பாடு நிலாவே என ரேவதி பாடட்டும் . பாடு(ம்) நிலாவே என மோகன் பாடட்டும் என்றார் . அருமை அண்ணா என உற்சாகமாக கை தட்டினேன் . ம் என்ற ஓர் எழுத்து அர்த்தம் பொருந்தியது . ரேவதி நிலவை பார்த்து பாடுகிறார் . மோகன் ரேவதியை முன்னிலைப்படுத்தி பாடுகிறார் . பாடல் வெற்றி பெற்றது . இப்போது இன்னொன்று தோன்றுகிறது . அது இசைஞானிக்கே தெரியாது . பாடும் நிலா பாலு என எஸ்பிபி அழைக்கப்படுகிறார் . அன்று ராஜா சேர்த்த மெய்யெழுத்து பாலுவின் அடையாளமாகி விட்டது

−மு.மேத்தா

No comments:

Post a Comment