கேள்விகள் யட்சன்
பதில்கள் தருமன்
தூங்கும்போது கண்ணை மூடாமல் இருப்பது எது?
மீன்
பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
முட்டை
தன்னுடைய வேகங்காரணமாக வளர்வது எது?
ஆறு
நோயாளிகளுக்கு நண்பன் யார்?
மருத்துவன்
காற்றைவிட வேகமானது எது?
மனம்
பொன்னைவிட மதிப்புடையது எது?
அறிவு
எதை விடுவதன் மூலம் பிறர் அன்பை பெறமுடியும்?
ஆணவத்தை விட்டுவிட்ட மனிதன் மற்றவர்களின் அன்பை பெறுகிறான்
மனிதன் எதனால் அளக்கப்படுகிறான்?
அவனுடைய நடத்தையால்
சரியான பாதையை எவ்வாறு அறிவது?
விவாதங்களினால் அல்ல ஆசிரியர்கள் வழியாக அல்ல. தனிமையான சூழலில் அமைதியான மனநிலையில் தன்னை உள்முகமாக பார்க்கப் பார்க்க சரியான பாதை புலனாகும்
⁃ மகாபாரதம் மாபெரும் விவாதம் பழ. கருப்பையா 2014
No comments:
Post a Comment