Tuesday, 27 December 2016

கவிதாஞ்சலி- சுதர்சன்

sudarsan

இந்த ஆண்டில் எழுதிய 'கவிதாஞ்சலி' தொடர்பதிவின் மொத்தத் தொகுப்பு இது. புதிதாக இணைத்துக்கொண்டவர்கள் படிக்கத் தவறியிருக்கலாம். அதற்கு முதல் கவிஞர் குட்டி ரேவதி ஒருமுறை பகிர்ந்துகொண்ட தகவல்:
"திரைப்பட இயக்குநர் வெர்னர் ஹெர்சாக்கிடம் ஒரு நேர்காணலில் அவர் படங்களின் இசை பற்றிக் கேள்வி கேட்கிறார்கள்.
'உங்கள் படத்தில் இசை இவ்வளவு சிறப்பாக இருக்கிறதே?
நீங்களும் சேர்ந்து இசையமைப்பீர்களா?'
'இல்லை. முழுக்க முழுக்க அது, இசை இயக்குநரின் வெளிப்பாடு தான்.'
'அவர்களின் இசைக்குறிப்புகளில் நீங்கள் திருத்தம் சொல்வீர்களா?'
'இல்லை. இசை பற்றிய பாலபாடம் கூட எனக்குக் கிடையாது. இசைக்குறிப்புகள் என்ன அர்த்தத்தில் இருக்கின்றன என்று கூடத் தெரியாது. இசை பற்றிய என் படிப்பறிவு, சுழியம்'
'பின், எப்படி உங்களின் ஒவ்வொரு படத்திலும் இசை பெருஞ்சுழிப்புடன் உள்ளிழுப்பதாய் இருக்கிறது?'
'வேறொன்றுமில்லை. என் இதயத்தை இசைக்குப் பழக்கப்படுத்துவதில் தான், நான் என் முழு வாழ்க்கையையும் செலவழித்திருக்கிறேன். ஓர் இசை ஒலிக்கும்போது, அது சிறந்த இசையா இல்லையா என்று என் இதயத்தை வைத்துத்தான் தேர்ந்தெடுப்பேன். ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும், என் இதயத்தின் தலையசைப்பிற்காக நான் காத்திருப்பேன்!'"
அதேபோல எனக்கு மொழி...
ஒரு பாடல் அதனுள்ளே கவிதைத்தன்மை கொண்டிருப்பது என்பது மிகவும் அரிதான விடயம். அப்படியான பாடல்கள் நிச்சயமாக என் தெரிவுகளில்(Playlist) முதலிடத்தைப் பிடித்துவிடும். பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கும்போது வார்த்தைத் தேர்வுகளில் நழுவித் தொலைந்துபோவது ஒரு சுகானுபவம். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒருபாடல் தரக்கூடிய அதியுச்ச சுகம் என்றால் அதுதான் என்பேன். அப்படியான பாடல்களைத் தொகுக்கவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் . கவிதைகளில் இருக்கும் மீமொழி(metalingualism) அழகு. அதாவது, இரண்டாம் அடுக்கு மொழி. ஒன்றை நேரடியாகச் சொல்லாமல் இன்னொரு கவிதை மொழி மூலம் வெளிப்படுத்துவது. அதில் கற்பனைக்கு நிறையவே வேலை இருக்கும். "கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை" என்பது போல, அந்தப் புதிருக்குள் நுழைந்து யாத்திரை செய்வது ஒருவித போதை.
உதாரணமாக, "உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது. இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது." என்கிற வைரமுத்துவின் வரிகளை எடுத்துக்கொள்ளலாம். கற்பனைச் சிறகு விரிந்தால் இதற்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்களுக்கு மேலே எழுதிவிடலாம். சாய்ந்ததில் உன் பூக்கள் உதிர்ந்து இந்தப் பூமியை நிரப்பிவிட்டன என்று சொல்லலாம். அல்லது, அந்த அழகைக் கீழிருந்து கண்ட இந்தப் பூமி சிலிர்த்து மலர்ந்தது எனலாம். இல்லாவிட்டால், பெண்ணழகு கண்டு என் இளமை எனும் பாலைவன பூமி மலர்ந்துவிட்டது என்றுகூடக் கொள்ளலாம். கவிஞர் எழுதிய பொருளையே படிப்பவரும் கொள்ளவேண்டும் எனும் விதிமுறைகள் கவிதைகளுக்குக் கிடையாது. கவிஞர் அப்படித்தான் சிந்தித்திருக்க வேண்டும் என்கிற அவசியமும் கிடையாது.
இதில் வெறுமனே பாடல்களைப் பற்றி எழுதிய பதிவுகளைத் தவிர்த்திருக்கிறேன். முழுக்க முழுக்க கவிஞரின் மொழி நயத்தைப் பேசும் பதிவுகள் இவை.
https://www.facebook.com/sudha001/posts/969839946457414 - கவிதாஞ்சலி 1
https://www.facebook.com/sudha001/posts/887290571379019 - கப்பலேறி போயாச்சு
https://www.facebook.com/sudha001/posts/895917977182945 - வெண்ணிலவே வெண்ணிலவே
https://www.facebook.com/sudha001/posts/952929071481835 - நீர் - காதல்
https://www.facebook.com/sudha001/posts/953738394734236 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
https://www.facebook.com/sudha001/posts/970979759676766 - தீண்டாய் மெய் தீண்டாய்
https://www.facebook.com/sudha001/posts/976449482463127 - தொடத் தொட மலர்ந்ததென்ன
https://www.facebook.com/sudha001/posts/992743210833754 - வெள்ளி மலரே
https://www.facebook.com/sudha001/posts/984919831616092 - மலர் சூடும் வயது - மலர்களே
https://www.facebook.com/sudha001/posts/1017515755023166 கண்ணாளனே
https://www.facebook.com/sudha001/posts/1039625346145540 - முத்தாடு
https://www.facebook.com/sudha001/posts/1037260969715311 குல்மொஹர் மலரே
https://www.facebook.com/sudha001/posts/1029536460487762 - குறுக்குச் சிறுத்தவளே
https://www.facebook.com/sudha001/posts/1056271287814279 - குறுக்கு சிறுத்தவளே 2
https://www.facebook.com/sudha001/posts/1068693439905397 - கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
https://www.facebook.com/sudha001/posts/1047481072026634 - காதல் வந்தால் சொல்லி அனுப்பு
https://www.facebook.com/sudha001/posts/1124845377623536?pnref=story
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில்
https://www.facebook.com/sudha001/posts/1140826276025446
விம்ம விம்முவா

No comments:

Post a Comment