Sunday, 4 December 2016

உரையாடல்

சீடர் : விஷம் என்றால் என்ன?

ரூமி :  நம் தேவைக்கு அதிகமாக இருப்பது எதுவோ அது தான் விஷம்.அது அதிகாரமாக இருக்கலாம் ,இல்லை செல்வமாக கூட இருக்கலாம் .ஏன் அன்பு,வெறுப்பு ,பசியாக கூட இருக்கலாம் .

சீடர் :பயம் ?

ரூமி : நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது பயம்.நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளும் போது அது சாகசம் ஆகிவிடும்

சீடர் : பொறாமை ?

ரூமி : மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே பொறாமை,அப்படி ஏற்றுக்கொள்ளும் போது அவர் உனக்கு உத்வேகத்தை தரக்கூடியவராக மாறிவிடுகிறார்

சீடர் : கோபம் ?

ரூமி : நம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது கோபம் ..அப்படி ஏற்றுக்கொள்ளும் போது அது சகிப்புத்தன்மை ஆகிவிடுகிறது

சீடர் : வெறுப்பு ?

ரூமி: இன்னொரு மனிதனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பது வெறுப்பு.நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ளும்போது அது அன்பாகிவிடுகிறது.

No comments:

Post a Comment