சீடர் : விஷம் என்றால் என்ன?
ரூமி : நம் தேவைக்கு அதிகமாக இருப்பது எதுவோ அது தான் விஷம்.அது அதிகாரமாக இருக்கலாம் ,இல்லை செல்வமாக கூட இருக்கலாம் .ஏன் அன்பு,வெறுப்பு ,பசியாக கூட இருக்கலாம் .
சீடர் :பயம் ?
ரூமி : நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது பயம்.நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளும் போது அது சாகசம் ஆகிவிடும்
சீடர் : பொறாமை ?
ரூமி : மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே பொறாமை,அப்படி ஏற்றுக்கொள்ளும் போது அவர் உனக்கு உத்வேகத்தை தரக்கூடியவராக மாறிவிடுகிறார்
சீடர் : கோபம் ?
ரூமி : நம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது கோபம் ..அப்படி ஏற்றுக்கொள்ளும் போது அது சகிப்புத்தன்மை ஆகிவிடுகிறது
சீடர் : வெறுப்பு ?
ரூமி: இன்னொரு மனிதனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பது வெறுப்பு.நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ளும்போது அது அன்பாகிவிடுகிறது.
No comments:
Post a Comment