Sunday, 4 December 2016

திருமாவேலன்

சிங்கள பேரினவாதத்துக்கு சிதைமூட்ட தங்களது தேகத்தை விறகாக்கிய மாவீரர்கள் நாள் இது!
நவம்பர் 27ல் நினைக்கத்தக்க 27 பேர் மட்டும்....
1. பலவீனமான இனத்தின் பலமான ஆயுதமான மில்லர்
2. நான் காத்தோடு காத்தாக போயிடுவேன் அம்மா என்று தனது தாயிடம் விடைபெற்ற அங்கயற்கண்ணி
3. நாட்டுக்காக சாகப்பயப்படக்கூடாது என்ற நருவிளக்குளம் காலின்ஸ்
4. தம்பியின் அண்ணன் பால்ராஜ்
5. படித்தவன் இறுதிவரை உறுதியாக இருக்க மாட்டான் என்ற எண்ணத்தை தகர்த்த பாலசிங்கம்
5. முடமான இனத்துக்காக திடமான இதயத்துடன் வலம் வந்த கிட்டு
6,7 சாக்லேட் சாப்பிடுவது போல் சயனைட் சாப்பிட்ட குமரப்பாவும் புலேந்திரனும்
8.கடலாட்சி செய்த சூசை
9. நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது என்று கேட்ட ரூபன்
10. ஆண் போராளிகளுக்கு நிகராக அல்ல மிகையாக போராட வேண்டும் என்ற நளாயினி
11. சாவை சும்மா சாகக்கூடாது என்ற மங்கை
12. தோழிகளுக்கு துப்பாக்கி சுடவும் பூ சுற்றவும் கற்றுக்கொடுத்த ஶ்ரீவாணி
13. தத்துவார்த்த முகம் பாலகுமாரன்
14. தமிழ்முகம் புதுவை ரத்தினதுரை
15. போர்க்கலைப்புலவன் தமிழ்ச்செல்வன்
16.நிஜ நாயகிகளை உருவாக்கிய நிஜ நாயகி விதுஷா
17. என்னை விட்டுவிட்டு என் ஆயுதத்தை எடுத்துச் செல் என்னை விட அதுதான் முக்கியம் என்ற மாலதி
18. வேவு பார்ப்பதில் கில்லாடியான அஸ்வினி
19. பேரைப் போலவே கம்பீரமான கடாபி
20. தடைகள் உடைக்கும் தீபன்
21. படைபடையாய் எழுந்த பானு
22. நாடு உருவாக்கிய நிர்வாகி நடேசன்
23. அம்மா என்றால் பூபதி அம்மா
24. புத்தன் பிறந்த நாட்டுக்கும் அலைந்த நாட்டுக்கும் அகிம்சை பாடம் எடுத்த திலீபன்
25. நீ என்ன பாவம் செய்தாயடா பாலச்சந்திரா
26. நிலத்துக்காக நிர்வாணத்தையே தந்த இறைவி இசைப்ரியா
27. உலகில் எந்தப் புரட்சியாளனும் சொல்லாத...
" எனது தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் மாறினால் எனது பாதுகாவலரே என்னை சுட்டுக் கொல்லலாம்" என்ற பிரபாகரன்
_திருமாவேலன்

No comments:

Post a Comment