ஓர் உழவன்
மண் வெட்டும்போது
அவனுக்கு அவனே
குழி வெட்டுவது போல இருக்கிறது
அவன்
நாற்று நடும்போது
அவனது கல்லறையில்
அவனே பூ வைப்பது மாதிரி இருக்கிறது
மாடுகள் இல்லை
அவனே உழுதான்
மழை வரவில்லை
அவனே அழுதான்
அறுவடைக் காலத்தில்
அவனது நிலத்தில்
அறுத்த கதிராய்
அவனே கிடந்தான்
அவனது வாய்க்கரிசியைக்கூட
அவனே விளைவித்திருக்கிறான்...
அதற்கு மேல்
அவனுக்கு
யாரென்ன செய்யக்கூடும்?
- பழநிபாரதி
No comments:
Post a Comment