Sunday, 29 August 2021

விடிவதற்குள் வா*சுஜாதா

விடிவதற்குள் வா
*சுஜாதா

RM314
பக்கம்:150

உயரமான சறுக்கலில் அமர்ந்து சறுக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது சுஜாதாவின் நடை. கல்கியில் தொடராக வந்த நாவல் கன்னியாகுமரி அருகே மண்டைக்காடு பகுதியில் நடந்த மதமாற்ற சச்சரைவை வைத்து புனையப்பட்டது .ஆனால் முற்றிலும் வேறு ஒரு கதையில் இலை மறை காயாய் இதை சொல்லியிருப்பார்.

துபாயிலிருந்து வேலை பார்த்து மண்டைக்காடு கிராமத்திற்கு திரும்புகிறான் கனகசபை.மனைவி கிரிஜாவை பார்க்க ஆவலுடன் அவள் விரும்பிய தங்க நகைகளை வாங்கி வருகிறான்.ஆசையாய் வந்து கதவு திறந்தால்..தான் வருவதாய் பத்து நாளுக்கு முன் அனுப்பிய கடிதம் பிரிக்கப்படாமல் இருந்தது.

பக்கத்து வீட்டில் இருந்த உண்ணி, அவன் அக்கா தேவகியிடம்  விசாரித்துவிட்டு வீட்டில் உண்ணியுடன் தேட 'விடிவதற்குள் வா'-ரசா" என எழுதியிருந்தது.இது அவனுக்கு சந்தேகத்தை கிளப்பியது. ஊரில் உள்ள சர்ச் பாதர், கோவில் பூசாரி என அனைவரிடமும் விசாரிக்கிறான் கனகசபை.ரத்தினசாமி தான் ரசா வா என பல யுகங்களில் ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் வருகிறது.நமக்கும் கூடவே

சர்ச்சின் பின்புறம் கிரிஜாவின் தங்க வளையலும்,நாயொன்று அவள் புடவையை உருவிக் கொண்டிருக்க ஊரிலுள்ள ஒரு சாராரின் சந்தேகம் ஃபாதரின் மீது வருகிறது.அது அப்படியே மதக்கலவராமகிறது. துப்பாக்கிச் சூட்டில் சிலர் இறக்க அதில் 16 வயது நிரம்பிய உண்ணியும் ஒருவன்.துபாய்செல்ல வேண்டும் எனும் தனியாத வேட்கையுடன் இறக்கிறான்

எப்படியும் மனைவி கிரிஜா வரப்போவதில்லை என உணர்ந்து
நிராதரவாய் நிற்கும் தேவகியை கைபிடிக்கலாமா என எண்ணுகிறான். அப்போது கிரிஜாவின் முகத்துடன் வேதாரண்யத்தில் இருந்து ஒரு செய்தி வருகிறது.மனைவியை கண்டுபிடித்தானா,தேவகியை கைப்பிடித்தானா, மதக்கலவரத்தின் முடிவு என்ன என விறுவிறுப்பாய் 150 பக்கத்தை ஒரே மூச்சில் படிக்க வைத்துவிடுகிறார் சுஜாதா

#ரசித்த வரிகள்

*ஈரவாசனையும் இல்லாமல் மண் வாசனையும் இல்லாமல் ஒருவிதமான நடுநாற்றம்

*கூந்தல் ஏராள ராத்திரி போல் இருந்தது

*இந்த கிராமம் எதையோ மறைத்து வைத்திருப்போல் தோன்றியது அவனுக்கு

*மண்ணெண்ணெய் விளக்குகள் வீடுகளுக்குள் துடித்துக் கொண்டிருந்தன

*ரசவல்லிபுரத்தில் இறங்கினான்.
பஸ் அவனை புறக்கணித்துவிட்டு சென்றது 

*அந்தப்பெண்ணுக்கு பதினாறு பதினேழு வயதிருக்கும்.அழாமல் இருந்தால் அழகாக இருப்பான் போலத் தோன்றியது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment