Deddy Bear
தியோடர் ரூஸ்வெல்ட் பெரிய வேட்டைக்காரர். நவம்பர் 14, 1902ல் மிசிசிப்பி அருகே ஒரு கரடி வேட்டைக்குப் பயணம் போனார்.
மிசிசிப்பி ஆளுநர் ஆண்ட்ரூ ஒரு உள்ளூர் வேட்டைக்குழுவை ஏற்பாடு செய்திருந்தார்.
காட்டில் அனைவரும் சிறு குழுக்களாக பிரிந்து சென்று வேட்டையாடினார்கள். மற்ற வேட்டைக்காரர்களுக்கு கரடிகள் சிக்கின. தியோடரை ஒரு கரடியும் கண்டுகொள்ள வில்லை.
இந்த துயரத்தை ரூஸ்வெல்ட்டின் உதவியாளர்களால் தாங்க முடியவில்லை. ஒரு யோசனை பண்ணி, உதவியாளர் ஹோல்ட் கோலியர் ஒரு இளம்கரடியைப் பிடித்து வந்தார்.
ஒரு வில்லோ மரத்தில் கரடிகுட்டி கட்டப்பட்டது. செட்டப்பாக சுற்றிலும் இலைதழைகள் பரப்பப்பட்டன. 'சரித்திரத்தை' பதிவு செய்ய புகைப்படக்காரர்கள் தயாரானார்கள்.
பக்கத்துக் காட்டில் கரடியை தேடி சுற்றி திரிந்துகொண்டிருந்த ரூஸ்வெல்ட்டை அழைத்து வந்தார்கள்.
மரத்தில் கட்டி வைத்திருந்த கரடியை சுடுமாறு அதிபருக்கு "பரிந்துரைக்கப்பட்டது".
ஆனால் "ரூஸ்வெல்ட்" குட்டியை சுட மறுத்துவிட்டார்.
இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் செய்தித்தாள்கள் மூலம் காட்டுதீயாக பரவியது. ஒரு கரடியை சுட மறுத்த ஜனாதிபதியின் கதையை கட்டுரைகள் விவரித்தன.
இரண்டு நாள் கழித்து நவம்பர் 16, 1902ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கீழேயுள்ள கார்ட்டூனைப் போட்டு அதிபரை "கவுரவித்தது".
ப்ரூக்ளின் நகரின் சாக்லேட் கடை உரிமையாளர் மோரிஸ் மிச்சோம் இந்த கார்ட்டூனைப் பார்த்தார். அவரது மனைவி ரோஸ் அடைக்கப்பட்ட பொம்மை (stuffed toys) விலங்குகளை உருவாக்கும் கலை பயின்றவர்.
தம்பதியினர் ஒரு அடைத்த பொம்மை கரடியை உருவாக்கி, கரடியை சுட மறுத்த தங்கள் அன்பு ஜனாதிபதிக்கு அர்ப்பணித்தனர்.
No comments:
Post a Comment