Sunday, 29 August 2021

கனலி

வண்ணதாசன் அவர்கள் ஒரு கடிதத்தில் இப்படி எழுதியிருப்பார்.

"இப்பொழுதெல்லாம் ஒரு காட்சி பதற வைக்கிறது. நீக்கமற வளர்ந்து கிடக்கிற முட்செடிகளில் சிக்கிப் பரிதவிக்கும் பாலீத்தீன் துணக்குள், வெயிலும் காற்றிலும் அது படுகிற பாடுகள், உண்டாக்கிற பிரமைகள் அளவற்றது."

இந்த வாழ்வும் அப்படி சிக்கி தவிக்கிற ஒரு பிரமையை தான் அடிக்கடி என்னுள் தருகிறது. 

இன்னொரு கடிதத்தில் இப்படியும் எழுதியிருப்பார்.

" மனிதர்களைச் சம்பாதிப்பதற்காக முதலில் ஓடுங்கள். சம்பாதிப்பதற்காக அப்பறம் ஓடுங்கள். ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுகிற புள்ளியின் சூட்சுமம் பிடிபடுகிறபோது நீங்கள் வெற்றி பெற ஆரம்பிக்கிறீர்கள். இலக்கிய - இசை இன்னபிற ரசனையெல்லாம் எப்போதும் அடைய முடியும். அந்த உள்ளம் சிதையாத வாழ்க்கையை நழுவவிடாமல் வைத்துக் கொள்ள கொஞ்சம் சம்பாதித்துக் கொள்ளுங்கள். வெற்றி அடையுங்கள். இந்த உலகம் வெற்றியடைந்த மனிதனையும், அவனுடைய ரசனைகளையும் எளிதில் ஒப்புக்கொள்கிறது. ஒப்புக்கொள்ளும்படுயாக இருங்கள்."

ஒவ்வொரு முறையும் என்னுள் தேவையில்லாமல் பிரமை வரும் நேரங்களில் கூட அவரின் கடிதங்களை தேடி பிடித்துக் கொள்வேன். நிச்சயம் அது ஒரு மகிழ்ச்சி தான்.

-கனலி

No comments:

Post a Comment