Cobra effect
இந்தியாவில் பிரிட்டிஷார் ஆண்டபோது, தில்லியில், விஷத்தன்மை உள்ள நாகப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது .
இதனால் கவலையுற்ற அரசு பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில், பொதுமக்களிடம் " கொல்லப்படும் நாகப்பாம்புகளுக்கு,எண்ணிக்கை அடிப்படையில் தக்க சன்மானம்,வெகுமதி வழங்குவதாக அறிவித்தது.
இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.மக்களும் இறந்த பாம்புகளை காட்டி,சன்மானத்தை பெற்றுக்கொண்டே இருந்தனர்.
காலப்போக்கில்,சிலர் சன்மானம் பெறுவதற்காகவே பாம்புகளை வளர்க்க ஆரம்பித்து விட்டனர்.
இதனை அறிந்த ஆங்கிலேய அரசு,இந்த வெகுமதி திட்டத்தை நிறுத்தியது.வெகுமதி கிடைக்காத விரக்தியில் பாம்பை வளத்தவர்களே,அவைகளை தப்பிக்க விட்டனர்.
இதனால்,முன்பு இருந்த எண்ணிக்கையை விட பல மடங்கு பாம்புகளின் எண்ணிக்கை உயர்ந்தது.முன்பு இருந்த நிலைமையை விட , இந்த திட்டத்தால், நிலைமை இன்னும் மோசமாகியது.
இதை தான் ,நாகபாம்பு விளைவு (Cobra Effect ) என அழைக்க படுகிறது.
ஒரு பிரச்சனைக்கான தீர்வு, அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக, அதனை மேலும் தீவிரப்படுத்துவதே , Cobra Effect .
-படித்தது
No comments:
Post a Comment