#ReadingMarathon_2021
RM314
26/100
பக்கங்கள் 138
காந்தி என்கிற காந்தப்புலம்
-முனைவர் அ.பிச்சை
இப்படி ஒரு மனிதர் சதையோடு ரத்தத்தோடும் வாழ்ந்தார் என்பதை வருங்கால மக்கள் நம்ப மறுப்பார்கள்
-காந்தி குறித்து ஐன்ஸ்டீன்
எப்போது பார்த்தாலும் சலிப்படையாதது கடல், விமானம்,ரயில், மழலையின் சிரிப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.அதுபோல எப்போது படித்தாலும் ஆச்சர்யமான விஷயங்களை கற்றுக் கொள்வது காந்தியிடமிருந்து தான். தினமணியில் காந்திய அறிஞர் முனைவர் அ.பிச்சை சார் கட்டுரை எனில் முழுக்க படித்துவிட்டுத் தான் நகருவேன். காரணம் காந்தி எனும் ஆளுமையை முன்னிறுத்தும் பாங்கு.வெறுமனே புகழாமல் சம்பவங்களையும் தத்துவங்களையும் அடுக்கி அடுக்கி படிக்கிறவர்களை கருத்துக்களின் முழுமையை உள்வாங்கி புகழ வைப்பார்.இந்த புத்தகத்தில் உள்ள இருபது கட்டுரைகளிலும் ஏதேனும் தெரியாத செய்தி ஒன்றனையேனும் அதில் ஒளித்து வைத்திருப்பார். அறியாததை அறிந்து கொண்ட மகிழ்ச்சியை உள்ளூர ஏற்படுத்துவார்.
தென்னாப்பிரிக்காவில் துவங்கய ஒரு விதை பின்னர் எவ்வாறு விருச்சமானது என்பதை அங்கு நடைபெற்ற வரலாற்று நிகழ்வை பதிவு செய்துள்ளார்.சத்யாகிரகத்தை சோதனை அடிப்படையில் வெற்றி கண்டபின் இந்தியாவிலும் இதனைப் பயன்படுத்தினார்.
கோதுமையில் கல் பொறுக்கினால் சுதந்திரம் வந்துவிடுமா என இந்தியாவில் சத்யாகிரகம் செய்வதை ஐயுற்ற போதிலும் அவர் அதில் உறுதியாய் இருந்தார்.ஒரு இடத்தில் இலா காந்தி குறிப்பிடுகிறார்..இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் மகாராஷ்டிரா வில் அகோலா நகரின் பள்ளியில் கொடி ஏற்றிய பெருமை மறவாது என்கிறார்.
காந்தியை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர் சலீல் அரீப் காத்ரி எனும் ஜெர்மானியர்.அவரை புகைப்படம் எடுத்த தருணங்கள் அற்புதமானது என்றார்.வணிக நோக்கத்திற்கோ, போட்டோவுக்கோ போஸ் கொடுக்க மாட்டேன்.நீயே எடுத்துக் கொள் என்று 700க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்துள்ளார்.உப்பு சத்தியாகிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் உள்ள மக்கள் கூட்டம்தான் அவரை இன்னும் எழுச்சி பெற வைத்தது.மீண்டும் மீண்டும் போராடுவதற்கான உத்வேகம் தந்தது.
இதே போல் கனுகாந்தியும்.பல்வேறு புகைப்படங்களை எடுத்த போதிலும் காந்தி இறக்கும் தருவாயில் நவகாளியில் இருந்ததால் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. காந்தியை படம் எடுத்த கையால் யாரையும் எடுக்க மாட்டேன் என்பது கேள்விப்படாத செய்தி
கடந்த சிலநாட்களுக்கு முன் அரையாடை மனிதரான நிகழ்வு இருநூறு ஆண்டுகளை நிறைவு செய்த தமிழகத்தில் காந்தியின் வருகை.அன்று இரவு மதுரை மேலமாசி விதியில் 251ம் எண் உள்ள வீட்டில் என்ன நிகழ்ந்தது என்பதையும்,1947ல் அவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவர் மனதுக்கு பிடித்த நிகழ்வு ஒன்று நிகழ்ந்ததையும் அறிந்து மகிழ்ச்சியடைந்தார்.மேலும் காந்தியின் நினைவை கொண்டாடும் வகையில் நினைவிடத்தையும், இத்தாலி ஸ்பக்னா சதுக்கத்தில் இருக்கும் காந்தி சிலை குறித்தும் விவரித்துள்ளார்.
காந்தியின் நோக்கமெல்லாம் தேச விடுதலையைக் காட்டிலும், சமூக மறுமலர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுத்தார். வந்தேமாதரம் பாடல் வந்த கதையை நான்கு கட்டங்களாக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் கவிஞர் நர்சிமேதா எழுதிய "வைஷ்ணவ ஜனதோ" பாடல் தான். அது ஏன் பிடிக்கும், அதன் பொருள் யாவையும் விளக்கியுள்ளார். காந்தி இந்துத்துவா கொள்கை உடையவரா அல்லது சர்வ மத நம்பிக்கை உடையவரா என்பதை புரியாத புதிரா மகாத்மா கட்டுரை விளக்குகிறார்.
சர்தார் வல்லபாய் படேல் காந்தியின் மீது கொண்ட அன்பின் நிகழ்ச்சியையும், மரணத்தை எதிர்கொண்டபோது அவரின் மனநிலையும்,சர்ச்சிலும் காந்தியும் சந்திக்கவில்லை ஏன் அப்படி என்பதை ஒரு இடத்தில் விளக்கியுள்ளார்.ஒவ்வொரு கட்டுரையிலும் அறியாத ஒரு செய்தியையாவது அறியும் வாய்பை கொடுத்த கட்டுரையாளருக்கு நன்றிகள். ஜெயகாந்தன் கூறியது போல ஒவ்வொரு ஊரிலும் ஒரு காந்தி இருப்பார்.காந்தியம் இந்த மண்ணில் விதை போலக் கலந்திருக்கிறது.எங்கெல்லாம் சிறு முயற்சியில் ஈரம் படிகிறதோ, அங்கெல்லாம் காந்தியம் முளைத்தெழும் என்பார்
என்றென்றும் நினைவுக் கூற வேண்டியவர் காந்தி
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment