Wednesday, 27 October 2021

கல்யாண்ஜி

இத்தனை காலம்
சவரக் கத்தியைத்
தீட்டி மகிழ்ந்தவன்
பசிக்கு பயந்து 
மல்லிகைப் பூ விற்கையில்,
எனக்கு மட்டும்
தெரிகிறது.
கத்தித் துரு
ஒவ்வொரு பூவிலும்.

-கல்யாண்ஜி

No comments:

Post a Comment