"ஓர் இலட்சியவாதச் செயல்பாடு அடிப்படையில் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். அந்த மகிழ்ச்சி இருவகையானது. நாம் ஒன்றை அளிக்கிறோம் என்னும் மகிழ்ச்சி. நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்னும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியே வாழ்நாள் முழுக்க செயல்படச் செய்யும். எவ்வகையிலும் அவநம்பிக்கையும் சோர்வும் அடையாமலிருக்கச் செய்யும். எஞ்சுவது நம் ஆளுமை நிறைவே ஒழிய நாம் இதை செய்தோம், இதை மாற்றியமைத்தோம், இதை சாதித்தோம் என்னும் ஆணவமல்ல என்னும் உணர்வை அளிக்கும்.
ஒற்றை வரியில் சொன்னால் மேலும் மேலும் பெருகும் ஆழ்ந்த மகிழ்ச்சியை அளிக்காத எதுவும் சேவையோ கல்வியோ இலட்சியவாதச் செயல்பாடோ அல்ல."
- ஜெயமோகன்.
No comments:
Post a Comment