நமது வாழ்க்கையை சிறிது பரிசோதித்துப் பார்த்தாலும், நாம் மற்றவர்களிடம் கொள்ளும் உறவு முறைகளை துளியேனும் கூர்ந்து பார்த்தாலும், எப்படி நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர் எதிரிடையாக இருந்து வருகிறோம் என்று தெரியும். உண்மையில் நமக்கு யாரைப் பற்றியும் அக்கறையே இல்லை. நாம் அதுபற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு எவரைப் பற்றியும் ஒரு அக்கறையும் கிடையாது. நமக்கு அனுகூலமாக இருக்கும் வரை, நமக்கு ஓர் அடைக்கலமாக இருக்கும் வரை, நமக்கு திருப்தியளிக்கும் வரை தான் நாம் ஒருவரோடு உறவு கொள்கிறோம். ஆனால் அதில் சௌகர்யம் இல்லை, பயன் இல்லை என்றான மறுகணம் அந்த உறவை அப்படியே நழுவவிட்டு விடுகிறோம். அதாவது உறவு என்பது நமக்கு சுயதிருப்தியளிக்கும் வரை தான். இதைக் கேட்கும்போது கொடூரமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை கூர்ந்து பரிசோதித்தால் நான் சொல்லுவது உண்மை தான் என்று விளங்கும். இந்த உண்மையைப் புறக்கணிப்பது அறியாமையில் விழுந்திருப்பதாகும். அறியாமை சரியான உறவை உண்டு பண்ண முடியாது...."
- விடுதலை
குறுநாவலில் இருந்து.
No comments:
Post a Comment