இடது-வலது
பிரெஞ்சு புரட்சியில் தான் மிக பிரபலமான ‘Liberté! Egalité! Fraternité!’ சுதந்திரம்! சமத்துவம்! சகோதரத்துவம்! என்னும் கோஷம் முன்வைக்கப்பட்டது. அரச ஆட்சி, நிலப்பிரபுத்துவம், அரசர்களின் ஆட்சியில் கத்தோலிக்க குருமார்களின் பங்கு இதற்கெல்லாம் எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.
காலம் காலமாக பின்பற்றி வரும் பழக்க வழக்கம் கலாச்சாரம் என்னும் பெயரில் சிலர் மட்டுமே ஆதாயம் அடைந்து வருவதையும் பெரும்பாலான சாதாரண மக்கள் வறுமையிலும் துன்பத்திலும் உழல்வதை எதிர்த்து அந்த பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும் என்று போராட்டம் செய்தனர்.
எல்லாருக்கும் சமமான அடிப்படை மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதை தீர்த்து வைக்க national constituent assembly நிறுவப்பட்டது. புதிய ஆட்சி அதற்கு புதிய constitution எல்லாம் அமைப்பது இதன் நோக்கம்.
இதில் அரசருக்கு எவ்வளவு அதிகாரம் தருவது? அதில் மதகுருமார்களின் பங்கு என்ன? இதைப்பற்றி எல்லாம் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. அப்போது assembly யில் president க்கு வலது பக்கம் அமர்ந்து இருந்தவர்கள், அரசருக்கு நிறைய அதிகாரம் வழங்க வேண்டும். காலம் காலமாக பின்பற்றிய வழக்கங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாதம் வைத்தார்கள்.
president க்கு இடது புறம் அமர்ந்து இருந்தவர்கள், சுதந்திரம்! சமத்துவம்! சகோதரத்துவம்! அனைவரும் சமம், democratic republic வேண்டும் என்னும் வாதத்தை முன் வைத்தார்கள்.
அன்றைய பிரெஞ்சு நாளிதழ்களில் வலது சாரிகள் அரச ஆட்சிக்கு ஆதரவாக வாதம் செய்கிறார்கள் இடது சாரிகள் சமத்துவத்திற்கு ஆதரவாக வாதம் செய்கிறார்கள் என செய்தி வந்தது.
அதில் இருந்து, உலகம் முழுவதும் வலது சாரிகள் right-wing (conservative or reactionary political party) என்பது கலாச்சாரம், பண்பாடு, தேசியம் போன்றவற்றிக்கு ஆதரவு அளிக்கும் நபர்கள் என்றும்,
இடது சாரிகள் left-wing (liberal or radical political party) என்பது மாற்றம், மறுமலர்ச்சி போன்றவற்றிக்கு ஆதரவு அளிக்கும் நபர்கள் என்றும் ஆனது.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment