Thursday, 9 February 2023

செகாவ்


தமது எழுத்தாற்றலில் அபார நம்பிக்கை கொண்டிருந்த செகாவ், இலக்கிய விமர்சகர்களைப் பொருட்படுத்தியதில்லை. கோர்க்கியிடம் ஒருமுறை கூறினார்: 

"நிலத்தை உழும் குதிரைகளைத் தொல்லை செய்யும் பெரிய ஈக்களைப் போன்றவர்கள்தாம் விமர்சகர்கள். குதிரை வேலை செய்கிறது, அதன் தசைநார்கள் வயலின் தந்திகளைப் போல விறைப்பாய் உள்ளன. திடீரென்று ஈ குதிரையின் பிட்டத்தில் வந்தமர்கிறது. குதிரையின் தோல் சிலிர்க்கிறது. அது வாலைச் சுழற்றுகிறது...

ஈ எதற்காக இப்படி ரீங்காரத்துடன் சுற்றி வருகிறது? எதற்காக என்று அதற்கே தெரியாமலும் இருக்கக் கூடும். ஓயாமல் துறுதுறுத்துக் கொண்டிருப்பதைத் தனது இயல்பாகக் கொண்டுள்ள அது , தனது இருப்பைத் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகிறது. நானும்கூட உயிரோடு இருக்கிறேன் தெரியுமா? என்று அது கூறுவது போல் தோன்றுகிறது . ' பார், எனக்கு ரீங்காரமிடத் தெரியும்; என்னால் ரீங்காரமிடப்படாதது ஏதுமில்லை...'

இருபத்தைந்து ஆண்டுகளாக எனது கதைகளைப் பற்றிய விமர்சனங்களைப் படித்து வருகிறேன் . அவற்றில் ஒன்றிலாவது பயனுள்ள எந்த விஷயத்தையோ, மிகச்சிறிய அளவிலேனுமான நல்ல ஆலோசனையையோ படித்ததாக நினைவு இல்லை"

இவற்றில் மிகச் சிறந்த விமர்சனமாக இருந்த ஒன்றைப் பற்றி செகோவ் தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் கூறுகிறார்: 

“ஸ்காபிச்செவ்ஸ்கி என்பவர் மட்டும்தான் என் மனதில் பதிந்திருப்பவர். குடிபோதையில் நான் ஒரு சாக்கடைக் குழியின் ஆழத்தில் செத்துக்கிடப்பேன் என்று ஆரூடம் கூறியவர் அவர்"

-செகாவ்

No comments:

Post a Comment