Sunday, 12 February 2023

கற்கை நன்றே 18 *மணி



Dunning-Kruger Effect

ஐசக் நியூட்டன் அவர்களிடம், " உங்களுக்கு எல்லாம் தெரியும் இருக்கிறதே!" என்று ஒருவர் கேட்டதற்கு,
 விஞ்ஞான அறிவு என்பது கடல் மாதிரி" நான் அந்தக் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன்!! என் முன்னே, அறிவு என்பது கடல் போல் உள்ளது!! நான்
 சில கூழாங்கற்களை எடுத்து விளையாடிக் கொண்டிருப்பதை நீங்கள் என்னை மேதை என்று சொல்கிறீர்களே என்றாராம்.

Dunning மற்றும் Kruger என்ற இரு விஞ்ஞானிகளும் பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று நிறைய மனிதர்களிடம் ஆராய்ச்சி செய்தனர்.
ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட துறை சார்ந்து கேள்வி கேட்டதில் அதிகமானோர் தெரியும் என்றனர்.
புதிதாக வரும் இயந்திரத்தை இயக்கத் தெரியுமா என்றால் 80% பேர் கைகள் உயர்த்தினர்.1999ல் ஆராய்ச்சி முடிவினை வெளியிட்டனர்.ஒரு குறிப்பிட்டத் துறையில் குறைவாகத் தெரிந்து வைத்திருந்தாலும் நிபுணத்துவம் பெற்றதாய் தங்களை தாங்களே நினைத்துக் கொள்கின்றனர்.

சராசரிக்கும் மிகக் குறைவான திறமை உள்ளவர்கள் தங்கள் திறமையினை மிகை மதிப்பீடு (over estimated) செய்கின்றனர். இதற்கு காரணம் அவர்களின் அறியாமையே. அறியாமையினால் அவர்களுக்கு தங்கள் குறை தெரிவதில்லை அதனை திருத்தி கொள்ள வேண்டும் என்ற புரிதலும் இல்லை
நமது பணிக்கு அல்லது வாழ்க்கைக்கு ஒரு திறமை தேவைப்பட்டால் அந்த திறமையில் உண்மையாகவே நிபுணத்துவம் அடைந்திருக்கிறோமா என்பதை சரி பார்த்துக் கொள்வது அவசியம். சிறிதளவு திறமை இருக்கும்போது, அதீத நம்பிக்கையால் நம்மை நாமே திறமை கொண்டவராக எடுத்துக் கொள்கிறோம்

  ஷூவாங் ட்சு சொல்லும்போது ஒரு முறை பெரும் வெள்ளம் வந்தது. ஆற்றில் அதிக நீர் வந்ததால் ஆற்றின் அரசன் மகிழ்ந்தான். நான் தான் பெரியவன் என்று.தாவி வந்து கடலை அடைந்த போது அவன் முகம் வாடியது.கடலிடம் சொன்னான் "நூறு சிந்தனைகள் உள்ள ஒருவன் மற்றவர்களைவிடத் தனக்குத்தான் அதிகம் தெரியும் என நினைத்துக் கொள்கிறான்" என்றது.கடல் சொன்னது "பரந்து விரிந்த" எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்ததே அது போதும் என்றது.நம்மில் மேம்பட்டவரை காணும் வரை நமக்கும் இது பொருந்தும்.

உண்மையை மனம் கொண்டு மட்டும் பார்க்கத் துவங்கினால் இது போல் தோன்றும்.அகந்தை எல்லா அர்த்தத்தையும் கற்பிக்கும்.அந்த சிந்தனைக்கு வலு சேர்த்துக் கொண்டே இருக்கும்.ஒரு கட்டத்தில் நீங்கள் அதை கண்மூடித்தனமாக நம்பவும் துவங்குவீர்கள்.அதிகம் படிக்கும்போது உங்கள் மனம் நாம் இன்னும் ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லையே எனும் அகந்தையையே முதலில் அழிக்கிறது.ஆகவே ஒவ்வொரு துறையிலும் இன்னும் கற்றுக் கொண்டே இருப்போம்.நிபுணத்துவம் பெறுவோம்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment