Sunday, 5 February 2023

கற்கை நன்றே-15*மணி



யானையால் யானையாத் தற்று

யானை என்றாலே சிறு வயது முதல் நமக்குத் தெரிந்தது பிரம்மாண்டம் மட்டுமே.சமீபத்தில் பார்த்த elephant whispers யானை மீது இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. வனத்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியதாய் சுப.வீ அவர்கள் பகிர்ந்து கொள்ளும் செய்தி.

 யானையை மூன்று வழிகளில் பிடிக்கின்றனர். முதல் முறை குழி தோண்டி யானைகளை பிடிப்பது. யானை அளவுக்கு குழி தோண்டி அதன் மேற்பகுதியில் இலை தழைகளை மூடி யானைகளை பிடிப்பது.(pit fall method) ஆனால் இதில் பல விலங்குகள் மற்றும் குட்டி யானைகளும் விழுந்து விடுகின்றன. அடுத்ததாக இன்னொரு முறை ஆண் யானைகளும் பெண் யானைகளும் கூடுகிற அந்த பருவ காலத்தில் பெண் யானைகளின் பிறப்புறுப்பு சுரப்பிலிருந்து ஒரு திரவம் சுரக்கிறது. அந்த நேரத்தில் பெண் யானைகளை காட்டில் ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினால் ஆண் யானைகள் எங்கிருந்தாலும் மோப்ப சக்தி காரணமாக அங்கு வந்து சேரும்போது அந்த யானையை பிடிப்பது. இதில் ஒரு துன்பியல் போக்கும் இருக்கிறது.. சில வேலைகளில் யானைகள் அப்போது மதம் கொண்டு விடவும் வாய்ப்புகள் இருப்பதால் இரண்டாவது முறையும் பயன்படுத்தவில்லை.

 மூன்றாவதாக ஒரு முறை கையாளப்படுகிறது. மதயானையைக் கொண்டு மற்ற யானைகளை கைப்பற்றுவது. அந்த மூன்றாவது முறை மதநீர் என்பது ஆங்கிலத்தில் must என்று சொல்லப்படுகிறது. அதை அவர்கள்
Pre must,middle must,after must என்ற மூன்று சொற்களை சொல்கிறார்கள்.
யானையின் கண்ணுக்கும் காதுக்கும் இடையில் இருக்கிற ஒரு துளையில் இருந்து மத நீர் சுரக்கிறது. அதனை சுரக்க தொடங்குகிற போது அது முதல் நிலை. அப்போது அது யானை பாகனின் கட்டுக்குள் இருக்கும்.. ஆனால் உடனடியாக கட்டுப்படாது. இரண்டு மூன்று முறை சொன்ன பிறகுதான் கட்டுப்படும்.
 இரண்டாவது கட்டத்தில் எத்தனை முறை சொன்னாலும் பாகனுக்கு யானை கட்டுப்படாது தூக்கி எறிந்து விடும்.. அது முற்றிய நிலை. இறுதியாக மத நீர் வடிந்து வற்றி போன நிலை. அந்த நிலையில் யானை சோர்வாக ஆகிவிடும் எதற்கும் பயன்படாது.

மதநீர் வடியத் தொடங்குகிற அந்த நேரத்தில் யானை கட்டுப்பாட்டில் இருக்கும் போது.. யானையை ஓட்டிக்கொண்டு காட்டுக்குள் போவார்கள். அந்த வாசத்தின் காரணமாக, அச்சத்தின் காரணமாக, மற்ற யானைகள் இதன் கூடவே வந்து சேரும். அப்போது எளிதாக கைப்பற்றி விடலாம். 19ஆம் நூற்றாண்டில் யானை பிடிப்பதில் இது வளர்ந்த முறை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறதோ,அதை 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளுவர் எப்படி சொல்லி இருக்கிறார் என்று பெரிய அதிசயமாய் உள்ளது. ஒரு யானையைக் கொண்டு இன்னொரு யானை அச்சுறுத்தி பிடிப்பது போல் ஒரு பெரிய தொழிலை செய்கிறவன் அதை வைத்து சின்ன சின்ன தொழில்களை எல்லாம் கைப்பற்றி விட முடியும். அதுதான் வினைச்செயல் வகை.

" வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் 
யானையால் யானையாத் தற்று"

 என்பது குறள். வள்ளுவர் உண்மையில் இந்த விஷயத்தில் தீர்க்கதரிசி தான்.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment