சீனா ஜப்பான் போன்ற நாடுகளை எந்த outsiders அதாவது வேறு மத, இன, நாடு அரசர்கள் கைப்பற்றியதே இல்லை. ஆரம்பம் முதல் அவை பிற மத, இன, கலாச்சார தலையீடு இல்லாமல் ஒரே மாதிரி இருந்ததால் அங்கு பெரிய மாற்றம் வளர்ச்சி மாறுபாடு என்று வித்தியாசம் காட்டி சொல்வதற்கு ஏதுமில்லை.
அதே போல அவர்களும் பிற நாடுகளை கைப்பற்றி அவர்களது மதம், கலாச்சாரம் போன்றவற்றை திணித்ததில்லை. அதனால் அவர்களால் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று சொல்வதற்கு ஏதுமில்லை.
கிரேக்கத்தை எடுத்துக்கொண்டால் பல நாடுகளில் அவர்களது கலாச்சாரத்தை பரப்பி இருக்கிறார்கள்.
அவர்களது கலாச்சாரத்தின் தாக்கம் பிற இன மக்களிடம் இருக்கிறது. அவர்கள் கலாச்சாரம் வேறு இன மக்களால் அழிந்து இருக்கிறது. இப்படி வரலாறு நெடுக்கிலும் அதனுடைய தாக்கம் பல்வேறு வகையில் இருக்கிறது.
ஆனால் சீனாவுக்கு என்று 3000 வருட எழுதப்பட்ட வரலாறு இருக்கிறது. ஆனால் அதில் உலகத்தின் பங்கு ஏதுமில்லை. உலகிற்கும் அவர்களுக்கும் இருந்த தொடர்பு வணிகம் மட்டுமே.பேப்பர், gunpowder, பட்டு, தேயிலை இப்படி பல முக்கியமான விஷயங்களை சீனாவிடம் இருந்து பெற்று இருக்கிறோம்.
அவைதான் உலகிற்கு சீனர்களின் பங்களிப்பு. Opium War தான் வெளி உலகிற்கும் அவர்களுக்கும் நடந்த பெரிய சண்டை அதுவும் வணிகம் தொடர்பான சண்டை.
இந்த பக்கம் இயேசு பிறந்து, ரோம் கிறிஸ்தவத்திற்கு மாறி, பின்னர் ரோம் சாம்ராஜ்யம் வீழ்ந்து, இஸ்லாம் உதயமாகி இவ்வளவு அக்கப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில் அங்கு 3 அரச குடும்பங்கள் தான் மாறி இருந்தது. Chou dynasty, Chin dynasty, Han dynasty.
இன்றும் கூட அவர்கள் அவர்கள் மொழியில் தான் எழுதுகிறார்கள், படிக்கிறார்கள், வேலை வாய்ப்புக்கென்று வெளியில் யாரும் வருவதில்லை. சீன மக்கள் வெளியில் இருந்து சென்று சீனாவில் சென்று settle ஆகவில்லை.
அங்கிருந்த குகை மக்கள் படிப்படியாக அங்கே நாகரிகத்தை வளர்த்து இன்றும் அங்கேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று மிக நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது ஆனால் அதில் உலகத்தின் பங்கு எதுவுமில்லை.
-படித்தது
No comments:
Post a Comment