Monday, 6 February 2023

குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி ஏன்?




இந்தியாவில் முதன் முதலில் மகாத்மா காந்தி மறைவுக்கு தான் அரசு முழு மரியாதை வழங்கப்பட்டது.

தலைவர்கள், கலைஞர்கள் இறப்பின் போது அரசு மரியாதையின் ஒரு சடங்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவர் இந்த பிரிட்டிஷார் கடைப்பிடித்த பாரம்பரியம். அது இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. நாடு நாடாக சுற்றி வந்த பிரிட்டிஷார், அந்த காலக்கட்டத்தில், வேறுநாட்டிற்கு கடல் மார்க்கமாக நுழையும் போது, தங்களிடம் உயிரைப் பறிக்கும் ஆயுதங்கள் ஏதுமில்லை என எதிரிகளிடம் காட்டுவதற்காக, தங்கள் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை
வானத்தை நோக்கி சுட்டு தோட்டாக்களை காலி செய்துள்ளனர். 17ஆம் நூற்றாண்டில் இருந்த இந்த முறை அப்படியே கடற்படையின் மரபாகிப் போனது. பின்னர் ராணுவம் மற்றும் தலைவர்களின் இறப்புக்கும் குண்டுகள் முழுங்க மரியாதை செய்ய துவங்கியது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவிலும் இந்த குண்டுகள் முழங்க மரியாதை என்பது கடைபிடி கடைபிடிக்கப்பட்டது. அப்போது மறைந்தவர் அரசர் எனில் 101 குண்டுகள் சுடப்பட்டன. பின்னர் இன்று உலகளவில் 21குண்டுகள் என்பது பொதுவாகிவிட்டது.

52 விநாடிகளில் இந்த 21 குண்டுகள் முழங்கும். சுடப்பட்ட குண்டுகளை அங்கேயே விட்டுச் செல்லமாட்டார்கள்.அதனை சேகரித்து அதிகாரிகளிடம் வழங்குவர். முப்படைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் மறைவுக்கு 17 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி நடக்கும். சமீபத்தில் மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு 17 குண்டுகள் முழங்க மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது

-நன்றி தினமலர்

No comments:

Post a Comment