Friday, 3 February 2023

பா.ரா


இன்று காலை வந்த கனவில் ஒரு சிற்பி வந்தார்.

அந்த நாட்டின் அரசர் ஒரு புதிய அரண்மனை கட்டுகிறார். அந்த அரண்மனையில் வைப்பதற்கென்று ஒரு புத்தர் சிலையைச் செய்யும் பொறுப்பு இந்தச் சிற்பியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் அதைச் சிறப்பாகச் செய்கிறார்.

அதன்பிறகு, அந்தச் சிலையை அரண்மனைக்குக் கொண்டுசெல்கிறார்கள், உரிய இடத்தில் பொருத்துகிறார்கள். நாளை திறப்புவிழா.

அப்போது, அந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் அந்தப் பக்கம் வருகிறார், இந்தச் சிலையைப் பார்க்கிறார், அதிர்ந்துபோகிறார், உடனடியாகச் சிற்பியை அழைக்கிறார், 'இந்தச் சிலையில் புத்தர் அணிந்திருக்கிற ஆடையைச் செதுக்கியது யார்?' என்று கேட்கிறார்.

'முழுச் சிலையையும் நான்தான் செதுக்கினேன் ஐயா. ஏன் கேட்கிறீர்கள்?' ஏதாவது பிரச்சனையா?'

'நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். புத்தருடைய ஆடையில் உள்ள அந்த எழுத்துகளையும் நீங்களா எழுதினீர்கள்?'

'எழுத்துகளா?' சிற்பி யோசிக்கிறார். 'அவை வெறும் அலங்காரங்கள்தானே? என்னுடைய உதவியாளன் ஒருவன் அந்த அலங்காரங்களைச் செய்தான்.'

'அவை அலங்காரங்கள் இல்லை, வங்க மொழி எழுத்துகள்' என்கிறார் அமைச்சர், 'இந்த நாட்டின் அரசன் ஒரு முட்டாள் என்று அந்த எழுத்துகள் சொல்கின்றன.'

சிற்பி அதிர்ந்துபோகிறார். 'புதிய உதவியாளன், திறமையாக வேலை செய்கிறான் என்று வாய்ப்பு கொடுத்தேன். அவன் புத்தியைக் காட்டிவிட்டான்போல. இப்போது என்ன செய்வது? இதைச் சரிசெய்ய நான்கைந்து நாட்கள் ஆகுமே.'

'நம் ஊரில் பெரும்பாலானோருக்கு வங்க மொழி தெரியாது. அதனால் பிரச்சனையில்லை' என்கிறார் அமைச்சர். 'ஆனால், நம் அரசி வங்காளத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அந்த மொழி நன்றாகத் தெரியும்.'

அதன்பிறகு என்ன ஆனது ..

finish:

சிற்பி யோசித்தார். பிறகு சொன்னார்: ‘சரி, அரசி கேட்டால் இப்படிச் சொல்லுங்கள். நீங்கள் மட்டும் அறிந்த உண்மை எப்படியோ புத்தருக்கும் தெரிந்திருக்கிறது.’  என்றுசொன்னாராம்

No comments:

Post a Comment