Monday, 27 February 2023

கற்கை நன்றே-19


கற்கை நன்றே-19
*மணி

கொலம்பஸ் எனும் பெயரை படிக்காதவர்களே இருக்க முடியாது. வரலாற்றின் நினைவில் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் பெயர். சமீபத்தில் தோழர் அ.பாக்கியம் எழுதிய கட்டுரை வாசித்த போது அவரின் மற்றொரு முகத்தை அறிய முடிந்தது.

1451 இத்தாலியில் உள்ள ஜெனோவா நகரில் நெசவுத் தொழிலாளியின் மகனாக பிறந்தவர் கொலம்பஸ்.
திறமையான கப்பல் மாலுமியாக செயல்பட்டார். ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் கடல் வழி மட்டுமே இருந்தது என்பதை கொலம்பஸ் நினைத்ததால் ஆசியா என்றாலே இந்தியா என்றுதான் கருதினார். விவரங்களை தெரிந்து கொண்டு புவியல் ஞானி பாப்புலொடஸ் கெனாலியிடம் தன் பயணத்தை துவக்கும் முயற்சிகளை கேட்டறிந்து,பயணத்தை துவக்க முதலாம் போர்ச்சுக்கல் மன்னரை அணுகினார்.கிடைக்கவில்லை.

 எவரிடமும் உதவி கிட்டாததால் ஸ்பெயின் மன்னர் பெர்டினண்ட் ராணி இசபெல்லாவிடம் உதவி கேட்டு மனுசெய்தார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர்கள் உதவிட முன் வந்தார்கள். 1492 இல் சாண்டா, பிண்டா, நினா எனும் மூன்று கப்பல்களில் 39 கைதிகளை அடைத்துக் கொண்டு கொலம்பஸ் புதிய உலகை கண்டறிய புறப்பட்டார்.

வல்லரசு நாடுகளுடன் போட்டியிட நினைத்து ஸ்பெயின் நாடு தங்கம் மற்றும் இதர பொருள்கள் தேவைப்பட்ட காரணத்தினால் அது ஆசியாவில் இருப்பதாக அறிந்தனர். மேலும் மார்கோபோலோ போன்றோரின் பயண குறிப்பு அவர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தியது. கொலம்பஸ் மன்னருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதில் தான் கொண்டுவரும் பொருட்களில் 10 சதவீத பங்கு, புதிய பிரதேசத்தின் ஆளுநர் பொறுப்பு மற்றும் கடற்படை தளபதி பட்டம் வழங்க வேண்டும் என்றார்.  33 நாட்கள் பயணம் செய்து ஆப்பிரிக்க தீவில் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் புறப்பட்டார். புதிய பூமியை புதிய நிலப்பரப்பை கண்டுபிடித்து வருபவர்களுக்கு பெரும் தொகையும் ஓய்வூதியும் என ஸ்பெயின் அரசு அறிவித்திருந்தது இதையும் கொலம்பஸ் அடைய நினைத்தார்.

கொலம்பஸ் கியூபா தீவை அடைந்தபோது அதனைத் தான் ஜப்பான் என்று நினைத்தார். அங்குள்ள தீவில் சிறிது தங்கத்தை எடுத்துக் கொண்டு 39 கைதிகளையும் அங்கே விட்டு சென்றார். நாடு திரும்பிய கொலம்பஸ் அரசவையில் கூறி மற்றொரு பயணத்துக்கு அனுமதி வாங்கிச் சென்றார். 1493 செப்டம்பர் 25ல் 17 கப்பல்களில் 1200 பேர்களுடன் தங்கத்தை கைப்பற்றும் வேட்டையுடன் கிளம்பியது. தான் விட்டு வந்த 39 பேரும் தங்கத்தை குவித்து வைத்திருப்பார்கள் என்று எண்ணத்துடன் சேர்ந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த 39 கைதிகளையும் அங்கிருந்த செவ்விந்தியர்கள் கொன்றிருந்தனர். செல்லும் இடமெல்லாம் அங்கிருந்த பழங்குடியினர் சண்டையிட்டனர்.

பயணம் செய்ய அனுப்பிய ஸ்பெய்னுக்கு என்ன பதில் செய்வது என்று தெரியாததால் 500 அடிமைகளை பிடித்து ஸ்பெயினுக்கு அனுப்பினார். ஆனால் அவர்களில் 200 பேர் வழியிலேயே இறந்து விட்டிருந்தனர். தங்கம் வேண்டும் என்று ஆவலுடன் ஒவ்வொரு இடத்தையும் அணுகினார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் கொலம்பஸ் ஏமாற்றுவதாக நினைத்து அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது.

 கொலம்பஸ்க்கு பிறகு அதிகம் பேர் கடல் பயணம் மேற்கொண்டனர். அதில் அவரின் உற்ற நண்பரான பிளாரன்ஸ் நாட்டைச் சார்ந்த ஹயடோ என்பவர் அமெரிக்க வெஸ்புகி என்பவரை தன்னுடன் அழைத்துச் சென்றார். திரும்பி வந்த பிறகு அமெரிக்காவைப் பற்றி இவர் அழகாக வர்ணிக்க அதன் மூலம் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து கண்டதை வரைந்த மாட்டின் வல்டாஹ் முல்லர் என்ற ஜெர்மனியர் இக் கண்டத்திற்கு அமெரிக்கா என பெயர் எழுதினார்.

இதற்கிடையில் கொலம்பஸ் விடுதலை பெற்று, நான்காம் முறையாக பயணித்தார்.பல்வேறு நாடுகள் அவரை ஏற்கமறுத்ததால் ஜமைக்கா சென்றார்.எங்கும் வரவேற்பு இல்லாததால் 1504ல் ஸ்பெயினுக்கே திரும்பினார்.
இறுதிக்காலத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவர் 1506ல் இறந்தார்.

தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment