Sunday, 13 November 2022
Old is gold-12*மணிIf you find science boring, you're learning it from a wrong teacher.#சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை-ஹாலாஸ்யன்இக்கட்டுரையாசிரியர் ஹாலாஸ்யன் ஏற்கனவே தினமணியில் ஆச்சரியமூட்டும் அறிவியல் புத்தகம் வாசித்துள்ளதால் இந்தப் புத்தகத்தையும் மிகவும் ஆர்வத்துடன் வாசிக்க தொடங்கினேன். அறிவியல் குரூப் எடுத்து படித்தால் மருத்துவம் படிக்கலாம், இன்ஜினியரிங் படிக்கலாம் என்றுதான் அறிவியலை பெரும்பாலானோர் எடுத்து பயிலகின்றனர். ஆனால் அறிவியல் குரூப் பயில்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது.அவர்களுக்கெல்லாம் இது போன்ற புத்தகங்களை கொடுத்தால் நிச்சயம் அறிவியல் ஆர்வம் ஏற்படும் அறிவியல் மனப்பான்மை வளரும்.செல்லின் அழிவு செயல்பாடுகளில் ஒன்று ஆட்டோ ஃபஜி. செல்கள் எவ்வாறு அழிகின்றன என்பதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார் .அதற்கு உறுதுணையாக இருக்கும் ஆட்டோஃ பஜி குறித்து ஆய்வு மேற்கொண்டு நோபல் பரிசு பெற்றவரை பற்றி இதில் கூறியிருப்பார். உணவுச் சங்கிலியில் ஒவ்வொரு உயிரினங்களும் பெருகுவதற்கான காரணத்தை பகு எண்கள்,பகா எண்கள் மூலம் விளக்கி இருப்பார்.காற்று மாசுபாட்டில் வாயு நிலையில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் சல்பர் ஆக்சைடுகள் அதன்பின் வைரஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் அதன் பின் துகள்மப் பொருட்கள் போன்றவை காற்றில் உள்ள மாசுபடும் பொருட்கள். மைக்ரோமீட்டரில் சொன்னால் 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை இருப்பவை. அதற்கு மேல் புழுதி இதெல்லாம். இதில் 2.5 முதல் 10 வரையிலான துகள்கள் ஆபத்தானவை. அவற்றின் சிறிய அளவுகள் வடிகட்டப்படாமல் நேரடியாக நுரையீரலிலும் ரத்தத்திலும் கலந்து விடக்கூடியவை. இவற்றை பார்ட்டிக்குலட் மேட்டர் என அழைக்கிறார்கள். இவைதான் பனிப்புகை உருவாக்கத்தில் முக்கியமானவை என்று காற்று மாசுபாடு குறித்த ஒரு கட்டுரையில் கூறியுள்ளார். இந்த பனிப்புகை தாக்கத்தால் காற்றை சுத்திகரிக்கும் கோபுரம் ஒன்றை பீஜிங்கில் அமைத்துள்ளனர். ஏழு மீட்டர் உயரம் கொண்டது. மணிக்கு சுமார் ஆயிரம் கன மீட்டர் காற்றில் இருந்து இந்த துகல்களை பிரித்து எடுக்கிறது குறித்து விரிவாக சொல்லிவிடுவார்.அத்தி பழத்தை சாப்பிடுவது விதைகளா பூச்சிகளா என்று பட்டிமன்றம் நிகழ்த்தி அதில் விதைகள் தான் என்பதை இறுதியில் தீர்ப்பளித்து இருப்பார். தடையவியலில் ஃபாரன்ஸ் டிபார்ட்மெண்ட் குறித்து மிக அழகாக ஆழமாகவும் வழக்குகளில் முடிவுக்கு வர சமர்ப்பிக்கப்படும் நீதிமன்ற ஆவணங்களில் தடயவியல் ஆய்வு அறிக்கை எவ்வாறு முக்கியமானவை என்பது குறித்து சுருக்கமாக அறிவியல் பூர்வமாக சொல்லி இருப்பார்.தடயவியலில் இரண்டு சிக்கல்கள் உண்டு. கிடைத்த டிஎன்ஏ வேறு எந்த டிஎன்ஏயுடன் கலப்படமில்லாமல் இருக்க வேண்டும் .ஒரே கருமுட்டையில் இருந்து உதித்த இரட்டையர்கள் ஒரே டிஎன்ஏ வை கொண்டிருப்பதால் குற்றவியல் வழக்குகள் சிக்கல் வரலாம்1930ல் ஜோசப் கார் கடலில் சில இடங்களில் உயிர் வளச்சிக்கு தேவையான எல்லாம் இருந்தும் உயிர்கள் ஏன் இல்லை என்பதனை கண்டறிந்து desolete regions எனக் குறிப்பிட்டார். அதன் தொடர்ச்சியாக 1980ல் ஜான் மார்ட்டின் என்பவர் இரும்புச்சத்து குறைபாடு என்னும் கருத்தை தோண்டி எடுத்து ஒளிச்சேர்க்கைக்கு இரும்பு ஒரு முக்கிய நுண்சத்து பொருள் என்று நிரூபிக்கிறார். இரும்புச்சத்து குறைபாடு அந்தப் பகுதிகளில் உயிரினம் இல்லாமல் போக காரணம் என்கிறார். அந்தப் பகுதிகளில் இரும்புச்சத்தை சேர்த்தால் கண் கணக்கில் கரியமிட வாய்வை கவர்ந்து கடலுக்குள் புதைக்கும் சக்தியை பாசிகள் உருவாக்கும் என்றன என்பதையும் கூறுகிறார்.மறைநீர் குறித்து படித்திருந்தாலும் இதில் நீல நீர், பச்சை நீர், சாம்பல் நீர் நீர் என்பது. நமக்கு கிடைக்கும் ஏரி,குளம்-நீல நீர். பச்சை நீர் என்பது மழை நீர். சாம்பல் நீர் என்பது ஏதேனும் ஒரு காரணியால் மாசுபடுகிற நீர் எல்லாம். ஒரு சட்டை உருவாவதற்கு 2700 லிட்டர் மறை நீர் தேவைப்படுகிறது. காவேரி தமிழகத்துக்கு கிடைக்காமல் போனதற்கு மாண்டியா பகுதியில் சிறு தானியம் விளைந்த வயல்களில் கரும்பு விளைவிக்க அவை அதிக நீர் உறிஞ்சுகிறது. பருத்தி ஒரு கார்போஹைட்ரேட். செல்லுலோசால் ஆன இலைகளைக் கொண்டது. அந்த செல்லுலோஸ் உருவாகும் ஒளிச்சேர்க்கை வினையில் நீர் ஒரு முக்கிய வினைப்பொருள். நீர் இல்லாமல் வராது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் எவ்வளவு மறை நீர் உள்ளது என்பதனையும் வியக்கச் சொல்லி இருப்பார்.பறவைகள் பறக்கும் போது எவ்வாறு திசை அறிகின்றன என்பதை குறித்து சொல்லும் போது the great arctic tern இன்னும் பறவை வட துருவத்தில் இருந்து தென் துருவத்திற்கு வலசை போகும். தமிழில் ஆலாக்கள் என்று அழைக்கப்படும் பறவையைப் பற்றி சொல்லியிருப்பார். கடல் மேல் பறக்கையில் சட்டென்று நீருக்குள் பாய்ந்து ஒரு மீனை கவ்விக்கொண்டு அந்த மீனை காற்றிலே தூக்கி போட்டு பிடித்து விழுங்கிவிடும். ஓயாமல் பறக்கிற அவற்றின் பெயராலேயே ஆலாய் பறக்கிறான் என்று சொலவடை வந்திருக்க கூடும் என்று சொல்கிறார். நாமும் அதனை படிக்கும் போது அப்படித்தான் இருக்கக்கூடும் என்று மனதில் நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு வழியை கண்டுபிடிக்கின்றன, எலிகளில் உள்ள நியூரான் செயல்பாடுகளையும் குறித்து சொல்லி இருப்பார்கவுண்டமணி ஒரு படத்தில் வண்டுரட்டான் தலையா என்பார். உண்மையில் வண்டுருட்டான் என்பது மிருகங்களுடைய கழிவுகளை வண்டுகள் உருட்டி உருட்டி எடுத்துப் போகும். இந்த வண்டுகளுக்கு dung beetles என்று பெயர். மண்ணின் வளத்தை பெருக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன கழிவுகள் ஒரே இடத்தில் குவித்து ஈக்கள் வராமலும் நோய் பரவாமலும் தடுக்கின்றன. கால்நடை வளர்ப்பில் முக்கியமாகவும் விவசாயிகளுக்கு நண்பனாகவும் விளங்கும் இந்த வண்டுகளை பற்றி தெரிந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சிசிறிய புத்தகம்தான் ஆனால் படிப்பதற்கு நிறைய நேரம் தேவைப்படும். நிறைய கருத்துக்களை உள்வாங்கி நம்மை யோசிக்க வைத்ததுடன், வெறுமனே வரட்டும் நிலையில் எழுதாமல் அவ்வப்போது சினிமா வசனங்களையும் நடைமுறை யதார்த்த பேச்சுக்களையும் உள்ளடக்கி சொல்லும் போது அறிவியல் மீது நமக்கும் ஒரு ஆர்வம் பிறக்கிறது. இந்த செய்திகளை எல்லாம் யாரிடமாவது சொல்லும் போது இன்னும் கொஞ்சம் உற்சாகம் பிறக்கும் அல்லவா தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment