தீவின் தண்ணீர் கரு நீல நிறம் கொண்டதாக இருப்பதால் அது கருந்தண்ணீர் (காலாபாணி )என்று அழைக்கப்படலயிற்று
#அந்தமான் தீவுச்சிறை
-என் ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து கருவூலம் என் ராமகிருஷ்ணன் அவர்கள் என் சங்கரய்யாவின் தம்பியாக இருந்த போதிலும்.. தான் கற்ற வரலாற்றை அனுபவங்களை, கட்சிகளின் வரலாற்றை, போராட்டத்தை எல்லாவற்றையும் ஆவணப்படுத்தியவர் தோழர் என். ஆர் ஆவார். பொதுவுடமை இயக்க வரலாற்றை அறிய நினைக்கும் ஒருவர் இவரின் பங்களிப்பை படிக்காமல் அதனை தெரிந்து கொள்ள முடியாது.
அந்தமான் சிறையை முதன் முதலில் தெரிந்து கொண்டது சிறைச்சாலை படத்தில் தான். அதற்கு முன்பு இந்திய வரைபடங்களில் பார்த்திருந்தாலும் அந்தமான் என்பதை கண்கூடாக பார்க்க வைத்தது அத்திரைப்படம் தான். இந்த புத்தகத்தை வாசித்த போது தான் அந்தமான் சிறையில் இன்னொரு முகம் நமக்குத் தெரிகிறது.78 பக்கங்களை நிரம்பிய இப்புத்தகம் ஒவ்வொரு பக்கங்களிலும் அறியாத பல வரலாற்றுச் செய்திகளை 13 கட்டுரைகளில் விவரிக்கிறது
1857 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பின் தனிமை சிறையில் அடைத்து புரட்சியாளர்களை ஒடுக்க நினைத்தது ஆங்கில அரசாங்கம். இந்தியாவில் இருந்து 1440 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ளது அந்தமான் தீவு.1796 இல் அங்கு மலேரியா விஷக்காய்ச்சல் ஏற்பட்டதால் அங்கிருந்து கப்பல் தளத்தை மூடியது. 1858 ஆம் ஆண்டு பஞ்சாபில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக 200 வீரர்கள் முதன் முதலாக அந்தமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். அங்கு இருக்கும் இரு ஆபத்துகள் விஷப்பூச்சிகள் மற்றொன்று பழங்குடியினர்கள். காட்டில் தப்பித்துச் சென்றாள் பழங்குடியினர் கொன்று விடுவார்கள் நேரில் தப்பித்துச் சென்றால் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்துக் கொன்று விடுவார்கள் அல்லது நீரில் மூழ்கி இறப்பார்கள் சிறைக்குச் சென்று மீண்டு வந்தவர்கள் அப்போது மிகவும் கொஞ்சம் பேர் தான்.
#எவ்வாறு கொண்டு செல்வார்கள்?
10 அல்லது 12 பேர்களை சேர்த்து சங்கிலிகள் இட்டு கப்பலில் இன்ஜினுக்கு அடுத்த இடம் தான் சிறை கூடமாக கருதப்படும். இங்கே கை விலங்குகளை எடுத்து விடுவார்கள். ஒவ்வொரு வினாடியும் இஞ்சினிலிருந்து வரும் உஷ்ணக்காற்று உடலை வாட்டும். இவ்வாறு நான்கு நாட்கள் கடலில் பிரயாணம் செய்து பின் அந்தமான் தீவை அடையலாம்.
சமூக அந்தஸ்து அடிப்படையில் டிவிஷன் இரண்டு மூன்று என்று பிரித்தனர். இரண்டாம் டிவிஷனை சேர்ந்தவர்களுக்கு அரிக்கேன் விளக்கு கட்டில் தலையணை தண்ணீர் இருக்கும். மூன்றாம் டிவிஷன் கைதிகளுக்கு எதுவும் இல்லை .நாயினும் கீழாக நடத்தப்படுவார்கள். நார் உரிப்பது செக்கு வேலை செய்ய வேண்டும். ஏதேனும் வேலை செய்யவில்லை என்றால் நாள் முழுவதும் நின்று கொண்டே இருக்கும் படியான இரும்பு சட்டங்கள் பூட்டப்பட்டு கசையடி கொடுக்கப்படும்.
#உண்ணாவிரதம்
1933 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி காலை அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மகாவீர் சிங் என்ற பகத்சிங்கின் தோழர் உயிரிழந்தார். இவ்வாறு மூன்று உயிர்கள் பறிபோன பின் 46 நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகு அரசாங்கம் பணிந்தது. பல்வேறு சலுகைகள் வழங்கியது. புத்தகங்கள் படித்தல் விவாதித்தல் மாலையில் விளையாட்டு என்று நாட்கள் செல்ல
ஆரம்பித்தது.
*1896-97 ஆம் ஆண்டில் தான் 400 அறைகள் கட்டி முடிக்கப்பட்டன. 1910 ஆம் ஆண்டில் 663 அறைகள் தயாராகின.
*1919- 20 ஆம் ஆண்டுகளில் ஆங்கில அரசாங்கம் இந்திய சிறைச்சாலை குழு ஒன்றை நியமித்து அந்த குழுவின் சிபாரிசின் அடிப்படையில் தண்டனை குடியிருப்புகளை(penal settlement) கைவிடுவது என்றும், அந்தமான் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை இந்திய சிறைச்சாலைக்கு மாற்றுவது என்றும் ஆங்கில அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி அச்சிறைச்சாலை 1921 இல் மூடப்பட்டது .குடியிருப்பு என்பது இங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்று அங்கேயே தங்க வைக்கப்படுவார்கள். தீவினை சீர் செய்வது, ஆங்கிலேயருக்கு உதவுவது என வாழ்நாள் முழுவதும் அங்கேயே தங்க வைக்க வேண்டும்.
அன்றைய நாட்களில் அகிம்சாவாதியாக சிறைக்குச் செல்பவர்கள் திரும்பி வரும்போது கம்யூனிஸ்ட் ஆக திரும்பி வருவார்கள். சிறைக்குள் நடக்கும் மார்க்சிய வகுப்புகள் இடதுசாரி சிந்தனை போதிக்கும் ஆசான்கள் பலரால் ஒவ்வொருவரும் புரட்சியாளராகவும் இந்திய தேசத்தின் விடுதலைக்கு பாடுபடுவதாகவும் திரும்பி வந்தனர். அவ்வாறு டாக்டர் நாராயண் ராய் பல்வேறு நபர்களை கம்யூனிஸ்ட் ஆக்கி திருப்பி அனுப்பினார்.
அந்தமான் குடியிருப்புகளை மூடியதைப் போன்று அந்தமான் சிறைகளையும் மூட வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. 1937 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடைசி வாரத்தில் 183 அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து இறுதியாக 1938 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் மாலை நேரத்தில் அந்தமான் தீவில் இருந்து இந்தியாவின் நோக்கி நகர ஆரம்பித்தது அரசியல் கைதிகள் கண்களில் அப்போதுதான் சுதந்திரம் தென்பட்டது.
புத்தகத்தை வாசித்து முடித்த பின் நாமும் இந்தியாவை தன் கண்களால் பார்த்தவாறு உணர்வுகளால் ஒவ்வொரு சொற்களையும் வெளிப்படுத்தி இருந்தார் .இந்த புத்தகத்தில் தோழர் என் ராமகிருஷ்ணன்
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment