கற்கை நன்றே-35
*மணி
தலைசிறந்த வில்லாளி மாடியில் ஓர் அரசரோடு பேசிக்கொண்டிருந்தார். மேலே நிறைய பறவைகள் பறந்துகொண்டிருந்தன. அந்தப் பறவைகளைக் காட்டிய அந்த வில்லாளி 'நான் அம்பு எய்யாமலே ஒரு பறவையை வீழ்த்திக் காட்டட்டுமா? நாணை இழுத்தால் போதும்' என்றார். அரசரும் சந்தேகத்தோடு சரி என்றார்.
அப்போது ஒரு தனி கொக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. வில்லாளி தன் வில்லை எடுத்து களை நாணை இழுத்தார். அந்தப் பறவை அந்தச் சத்தத்தைக் கேட்டுத் தரையில் விழுந்தது. மன்னருக்கு ஆச்சரியம். அந்த வில்லாளி விளக்கினார். 'இந்தக் கொக்கு ஏற்கெனவே ஓர் அம்பால் காயப்பட்டிருப்பது எனக்குத் தெரியும்,அதனால் தளர்ந்துபோய் சோகமாகப் பறந்தது. அதன் பழைய காயம் இன்னும் அதை உறுத்திக் கொண்டிருந்தது. தனியாகவும் பறந்தது. பயத்தோடு பறந்தது. நான் நாணை இழுத்ததும் அந்த வலியே அதை வீழ்த்துவதற்குப் போதுமாக இருந்தது'.
பலவீனமானவர்கள் என்று தெரிந்தால் அடுத்தவர்கள் எளிதில் வீழ்த்திவிடுவார்கள்.
No comments:
Post a Comment